கருட புராணம் - பகுதி 12 - பதினெண் புராணங்கள்
சுச்சிமுகா என்ற இரண்டாவது பேய் முன் ஜென்மத்தில் நேர்மை, ஒழுக்கம் இல்லாத ஒரு சத்ரியனாக இருந்தது. பத்ரவதா என்ற நதிக்கரையில் ஒரு பிராமணன் தன் ஐந்து வயது மகளைக் கரையில் உட்கார வைத்துவிட்டுக் குளிக்கப் புறப்பட்டான். இந்தச் சத்ரியன் அவளை அழித்து அவள் ஆபரணங்களைப் பிடுங்கிக் கொண்டான். குழந்தை தண்ணீர் குடிப்பதற்காகச் செம்பை வாயில் வைத்த பொழுது அந்தச் சத்ரியன் குழந்தையிடம் இருந்து செம்பைப் பிடுங்கி தண்ணீரையும் குடித்துவிட்டான். குழந்தை பயத்தினால் இறந்து விட்டது. குழந்தையைத் தண்ணிர் குடிக்க முடியாமல் செய்ததால் அந்தப் பேய்க்கு எதையும் உண்ண முடியாமல், வாயில் ஒர் ஊசி அளவு துவாரமே இருந்தது.
ஷிக்ரகா என்ற பேய் முன் ஜென்மத்தில் ஒரு வைசியனாக இருந்தது. அந்த வைசியன் தன் நண்பன் ஒருவனைச் சேர்த்துக் கொண்டு, தூர தேசம் சென்று வியாபாரம் செய்தனன். அந்த நண்பன் பெரு லாபத்தை அடைந்தான். இவன் எல்லா வற்றையும் இழந்தான். இருவரும் தங்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் ஒர் ஆற்றங்கரையில் இவன் அமர்ந்திருக்க, நிறைந்த லாபம் ஈட்டிய இவன் நண்பன் இவன் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் பொருளைத் திருட எண்ணிய இவன், தூங்குகின்றவனை ஆற்றுக்குள் தள்ளிவிட்டான். பிறகு அவன் பொருளை எல்லாம் இவன் எடுத்துக் கொண்டு இவன் ஊருக்குத் திரும்பினான். அவன் மனைவியைப் பார்த்து, 'உன் கணவனைத் திருடர்கள் அடித்துக் கொன்று விட்டார்கள் என்று சொல்லி விட்டான். துயரம் தாங்காத அவள் தற்கொலை செய்து கொண்டாள். இவன் பேயாக மாறி அலைகிறான்.
நான்காவது பேய் ரோதகா என்பவன் முற்பிறப்பில் சூத்திரனாக இருந்தான். இவன் உழைப்பைக் கண்டு மகிழ்ந்த மன்னன், நூறு கிராமங்களை இவனுக்கு இனாமாகக் கொடுத்தான். இவனுக்குத் தாய், தந்தையர், ஒரு தம்பி ஆக மூவர் உறவினர் இருந்தனர். நிலத்து ஆசை வெறியாக மாறிவிட்ட இவன், தாய் தந்தையருக்கும், தம்பிக்கும், சோறு போடுவதே வீண்செலவு என்று நினைத்து தம்பியை விரட்டி விட்டான். தாய் தந்தையரை சிறைக்குள் அடைத்து விட்டான். சிறையில் அடைபட்ட தாய் தந்தையர் விஷம் குடித்து இறந்தனர். தம்பியும் வறுமையால் உயிரை விட்டான். இவன் இறந்த பிறகு பேயாக மாறி விட்டான்.
ஐந்தாவது பேய் லேகா, முற்பிறப்பில் ஒரு பிராமணனாக இருந்தான். கோயிலில் பூசை செய்யும் பணியில் ஈடுபட்டிருந் தான். கோயிலில் உள்ள பல விக்கிரங்களுக்கும் ஆபரணங்கள் போடப்பட்டிருந்தன. அந்த ஆபரணங்களை எடுப்பதற்காக ஒரு கடப்பாறையால் நெம்பி எடுத்ததனால், விக்கிரகங்கள் காயப்பட்டன. இவன் நகைகளைத் திருடிய விஷயம் அரசனுக்குத் தெரிந்துவிட அரசன் இவனுக்குக் கொலைத் தண்டனை கொடுக்கத் தயாராக இருந்தான். அதை
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருட புராணம் - பகுதி 12 - Garuda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, இவன், விட்டான், பேய், தாய், அந்த, இருந்தான், முன், அவன், நண்பன், பிராமணன்