பாகவத புராணம் - பகுதி 12 - பதினெண் புராணங்கள்
சதியுடன் வந்த சிவ கணங்கள் அங்குள்ள முனிவர்களை யும், பிருகு முனிவனையும் வதைத்தனர். ஆனால் மாபெரும் சக்தி படைத்த பிருகு முனிவர் தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான தேவ கணங்களை உருவாக்கி சிவ கணங்களோடு போராடச் செய்தார். சிவ கணங்கள் தோற்று ஒடிச் சிவனிடம் நடந்ததைக் கூறினர். பெருங் கோபம் கொண்ட சிவன், தலையில் இருந்து ஒரு முடியைப் பறித்து மிகுந்த உக்கிரத்துடன் அதைக் கீழே எறிந்தார். அதிலிருந்து வீரபத்திரர் என்று ஒருவர் தோன்றினார். ஆகாயத்துக்கும் பூமிக்குமாக இருந்த அவர் எலும்பு மாலைகளை அணிந்து கொண்டிருந்தார். ஈடு இணையற்ற திரிசூலம்’ என்ற படையைக் கையில் ஏந்தி இருந்தார். மிக்க பணிவுடன் சிவனைப் பணிந்து, எனக்கு இடும் கட்டளை என்ன? என்று கேட்டார். சிவன், நடந்ததை நீ அறிவாய் அல்லவா? தட்சனுடைய யாகத்திற்குச் சென்று, அவனைக் கொன்று யாகத்தையும் அழித்து வருவாயாக!' என்று கட்டளையிட்டார். மிக வேகமாகச் சென்ற வீரபத்திரர் தட்சனுடைய யாகத்தையும், அது நடைபெற்ற மண்டபத்தையும் அழித்தார். அவருடன் சென்ற சிவ கணங்கள் முனிவர்களைப் பிடித்து நையப் புடைத்தார்கள். மாபெரும் சக்தி வாய்ந்த பிருகு முனிவனை ஒரு தூணில் கட்டி அவர் தாடியைப் பிய்த்து எறிந்தார். தட்சனுடைய கழுத்தை வெட்ட முயன்றபோது அது முடிய வில்லை. உடனே அவனைப் பிடித்து யாக பலி மிருகத்தைக் கட்டப் பயன்படும் யூபம்’ என்ற தூணில் கட்டி தட்சன் தலையை வெட்டியவுடன் அந்தத் தலை யாக குண்டத்தில் விழுந்து சாம்பலாயிற்று. அனைத்தையும் வெற்றியுடன் முடித்த வீரபத்திரர் சிவனிடம் வந்தார். இதனிடையே பயந்து ஒடிச் சென்ற முனிவர்கள் பிரம்மனிடம் நடந்ததைக் கூறி 'என்ன செய்வது என்று கேட்டனர். பிரம்மன், 'சிவனை மதியாது அகம்பாவத்துடன் நீங்கள் செய்த காரியத்துக்கு இந்த தண்டனை பொறுத்தமானதே. சிவனை எதிர்த்து யாரும் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் நேரே சிவனிடம் சென்று மன்னிப்புக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிவிட்டார். அவர்கள் அனைவரும் சிவனிடம் சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். மேலும் இரண்டு வரங் களையும் வேண்டினர். ஒன்று, தட்சனைப் பிழைக்க வைப்பது. மற்றொன்று, பிருகுவின் முகத்தில் மறுபடியும் தாடி முளைக்க அருள்வது. ஏற்கெனவே சினம் அடங்கிய சிவன் அவர்களை அழைத்துக் கொண்டு தட்சனின் யாக சாலைக்கு வந்தார். தூணில் கட்டப்பட்டிருந்த பிருகுவிற்கு மறுபடியும் தாடி முளைக்குமாறு செய்தார். ஆனால், தட்சன் வெட்டுண்ட தலையாக குண்டத்தில் விழுந்து சாம்பலாகி விட்டமையின் ஒர் ஆட்டின் தலையை எடுத்து அவன் உடம்பில் பொருத்தி தட்சனுக்கு உயிர் உண்டாகுமாறு செய்தார். எழுந்த தட்சன் சிவனின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். யாக குண்டத்தின் எதிரே உயிர் நீத்த சதி இமவானுக்கும், மேனகைக்கும் மகளாகப் பிறந்து சிவனையே மணம் செய்து கொண்டார். தட்சன் யாகம் தொடர்ந்தது. சிவபெருமானை வரவேற்று விஷ்ணுவே ஆச்சாரியனாக இருந்து யாகத்தை முடித்துக் கொடுத்தார்.
(பாகவத புராணத்தில் இத்தப் பகுதியில் துருவன் கதை விரிவாகப் பேசப்படுகிறது. முன்னரே விஷ்ணு புராணத்தில் இக்கதை பேசப்பட்டுள்ளதால் அதில் இடம் பெறாத பகுதி மட்டும் இங்கு தரப்பட்டுள்ளது.)
விஷ்ணுவிடம் வரம் பெற்ற துருவனுக்கு விஷ்ணு பின் வருமாறு கூறினார். “நீ இன்னும் உலகில் இருந்து திருமணம் செய்து கொண்டு மகப்பேறு பெற்று 36,000 ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும். அதன் பிறகு இந்த சித்திகள் எல்லாம் உன்னை வந்து அடையும். எனவே நீ இப்பொழுது உன் தந்தையிடம் செல்லலாம்” என்று கூறினார். அதன்படியே ஊருக்கு மீண்ட துருவனைக் கண்டு அவனுடைய தந்தையும், தம்பி உத்தமனும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். உத்தான பாதன் அரசுப் பொறுப்பை துருவனிடம் விட்டுவிட்டுத் தவம் செய்யக் காடு சென்று விட்டான். துருவன் ஆட்சிக்காலத்தில் அவன் தம்பி உத்தமன் வேட்டையாடச் சென்ற பொழுது ஒரு யட்சனால் கொல்லப்பட்டான். சீறி எழுந்த துருவன் பெரும் படையுடன் சென்று யட்சர்களை எதிர்த்தான். மாயப் போரில் வல்ல யட்சர்களின் மாயை எல்லாம், நாராயண அஸ்திரத்தின்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாகவத புராணம் - பகுதி 12 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சென்று, தட்சன், சென்ற, சிவனிடம், துருவன், தூணில், மன்னிப்புக், விழுந்து, தட்சனுடைய, செய்தார், பிருகு, சிவன், இருந்து, வீரபத்திரர், கணங்கள்