பாகவத புராணம் - பகுதி 14 - பதினெண் புராணங்கள்
கதையைக் கேட்ட பிராசீனவர்கி அதன் தத்துவத்தைப் புரிந்து கொண்டு ஆத்ம சொரூபத்தை அறிந்து கொள்ளப் புறப்பட்டு விட்டான்.
பாரத நாடு - பெயர்க் காரணம்
ஸ்வயம்பு மனுவின் மகனாகிய பிரியவ்ரதன் துறவு மேற்கொள்ள விரும்பி உலக வாழ்க்கையை வெறுத்துப் புறப்பட்ட போது, அவன் தந்தை, குரு பிரம்மா, நாரதர் ஆகிய மூவரும் அரசனாகப் பிறந்தவன் கடமையைச் செய்ய வேண்டியது நியாயம் என்றும், அதனைச் செய்து முடித்த பிறகு துறவு மேற்கொள்வதே உத்தமம் என்றும் கூறி அவன் மனத்தை மாற்றினர். அதன்பிறகு அவன் உலகை ஆள ஒப்புக் கொண்டான். சூரியன் தினமும் மேரு மலையைச் சுற்றிவரப் பயன்படுத்திய தேர் பிரியவ்ரதன் தேரே ஆகும். தினந்தோறும் சூரியன் பூமியின் பின்புறம் செல்லும் போது முன்புறம் இருட்டாவது அனைவரும் அறிந்த ஒன்று. பிரியவ்ரதனுக்கு இது பிடிக்கவில்லை. இரண்டு வேளையும் பகலாகவே இருக்க வேண்டும் என்று விரும்பினான். அதனால் தன்னுடைய நெருப்பைக் கக்கும் ரதத்தில் ஏறிக்கொண்டு மிக வேகமாக ஏழு முறை சுற்றி வந்தான். அந்த வேகத்தால் தேரின் சக்கரங்கள் ஏழு இடங்களில் மண்ணைத் தோண்டிக் கடலாக்கியது. அதன் பயனாக உலகம் ஏழு பிரிவுகளாகப் பிரிந்தது. பிரியவ்ரதன் தன் அந்திமக் காலத்தில் தன் ஏழு பிள்ளைகளையும் அழைத்து, உலகின் ஏழு பிரிவுகளையும் காட்டி ஒவ்வொரு பிரிவிற்கும் ஒருவன் அரசனாக இருக்கட்டும் என்று கூறினான். அவர்களுள் அக்னிதரன் பங்கிற்கு ஜம்பூத்வீபம் (நாவலந்தீவு) கிடைத்தது. இந்த அக்னிதரனுக்கு 4 பிள்ளைகள் பிறந்தனர். தன் பங்கிற்குரிய ஜம்பூத்வீபத்தை ஒன்பது பங்காக்கி அவர்களை ஆளச் செய்தான். அவர்களுள் நபி என்ற மகனுக்குக் கிடைத்த ஒன்பதில் ஒரு பகுதியை அவன் ஆண்டு மகன் ரிஷபனுக்கு அதைக் கொடுத்தான். இந்திரன் மகளாகிய ஜெயந்தியை மணந்த ரிஷபனுக்கு நூறு பிள்ளைகள் இருந்தனர். அவர்களுள் மூத்தவன் பரதன் எனப்பட்டான். அவன் பெயரை வைத்துத்தான் இப்பகுதிக்கு 'பாரத நாடு என்ற பெயர் வந்தது.
ஜட பரதனின் கதை
(விஷ்ணு புராணத்தில் வந்துள்ள பகுதி போக, புதிதாக வந்துள்ளவற்றை இங்கே தந்துள்ளோம்) பைத்தியம் போல் நடித்துக் கொண்டிருந்த பரதன் தன் உடம்பு பற்றி உணர்வே இல்லாமல் வாழ்ந்து வருகின்ற காலத்தில் ஒரு வயலில் அமர்ந்திருந்தான். காளிக்கு பலியிடுவதற்காக ஒரு சூத்திரன் தன் ஆட்களை ஏவி ஒருவனைப் பிடித்து வரச்சொன்னான். அவர்கள் ஒரு இளைஞனைப் பிடித்துச் சூத்திரனிடம் கொண்டு செல்கையில், இரவு நேரத்தில் அந்த இளைஞன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாகவத புராணம் - பகுதி 14 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அவன், அவர்களுள், பிரியவ்ரதன், யார், கொண்டு, அந்த