இரண்டாவது அத்தியாயம் (ஸாங்க்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
ராகத்வேஷவிமுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஷ்சரந்। ஆத்மவஷ்யைர்விதேயாத்மா ப்ரஸாதமதிகச்சதி॥ 2.64 ॥ |
விருப்பு, வெறுப்பு நீங்கியதும், தனக்கு வசப்பட்டதுமான புலன்களால் பொருட்களை அனுபவிக்கின்ற மனபக்குவம் பெற்றவன் மன தெளிவு பெறுகிறான்.
ப்ரஸாதே ஸர்வது:காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே। ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஷு புத்தி: பர்யவதிஷ்டதே॥ 2.65 ॥ |
மனத்தெளிவு பெற்றவனிடம் இருந்து எல்லா துக்கங்களும் விலகுகின்றன. ஏனெனில் மனத்தெளிவு பெற்றவனின் புத்தி விரைவில் விழுப்புறுகிறது.
நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா। ந சாபாவயத: ஷாந்திரஷாந்தஸ்ய குத: ஸுகம்॥ 2.66 ॥ |
ஒருமைபடாத மனத்தை உடையவனின் புத்தி விழிப்புறாது. புத்தி விழித்தெழாத ஒருவனால் தியானம் செய்ய முடியாது. தியானம் செய்யதவனுக்கு மன அமைதி கிடையாது. மன அமைதி இல்லாதவனுக்கு இன்பம் எங்கே ?
இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோ அநுவிதீயதே। ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி॥ 2.67 ॥ |
தண்ணீரில் மிதக்கின்ற படகை காற்று இழுத்து அலைக்கழிப்பது போல், உலகியல் சுகங்களில் ஈடுபடுகின்ற புலன்களை தொடர்ந்து செல்லுமாறு மனத்தை விட்டால் அது விவேகத்தை அழிக்கிறது.
தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிக்ருஹீதாநி ஸர்வஷ:। இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா॥ 2.68 ॥ |
தோல் வலிமையில் சிறந்தவனே ! யாருடைய புலன்கள் எல்லா வழிகளிலும் பொருட்களில் இருந்து விளக்கபட்டுள்ளனவோ அவனுடைய புத்தி விழிபுற்றதாகிறது.
யா நிஷா ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ। யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஷா பஷ்யதோ முநே:॥ 2.69 ॥ |
எல்லா உயிர்களுக்கும் எது இரவாக உள்ளதோ, தன்னை வென்றவன் அதில் விழிப்புடன் இருக்கிறான், உயிர்கள் எதில் விழிப்புடன் உள்ளனவோ, விழிப்புணர்வு பெற்ற முனிவனுக்கு அது இரவாக உள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாவது அத்தியாயம் (ஸாங்க்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, புத்தி, பகவத்கீதை, ஸ்ரீமத், எல்லா, அத்தியாயம், இரண்டாவது, யோகம், ஸாங்க்ய, அமைதி, நிஷா, இரவாக, விழிப்புடன், தியானம், மனத்தை, bhagavad, மனத்தெளிவு, இருந்து, gita, இந்து