இரண்டாவது அத்தியாயம் (ஸாங்க்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந। நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவாந்॥ 2.45 ॥ |
அர்ஜுனா ! வேதங்கள் முக்குண மயமான உலகை பற்றியவை, நீ மூன்று குணங்களையும் கடந்தவனாக, இருமைகளை கடந்தவனாக ,எப்போதும் சமநிலையில் இருப்பவனாக, தேடவும் பாதுகாக்கவும் செய்யாதவனாக, உன்னிலேயே நிலை நிற்பவனாக ஆவாய்.
யாவாநர்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே। தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத:॥ 2.46 ॥ |
எங்கும் வெள்ளபெருக்கு நிறைந்திருக்கையில் ஏறி நீரால் எவ்வளவு பயன் இருக்குமோ அவ்வளவு பயன் தான் உண்மையை அறிந்த சான்றோனுக்கு வேதங்களில் இருக்கும்.
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந। மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோ அஸ்த்வகர்மணி॥ 2.47 ॥ |
வேலை செய்வதில் மட்டுமே உனக்கு உரிமை உண்டு, பலன்களில் ஒருபோதும் இல்லை. வினைபயனை உண்டாக்குபவன் ஆகிவிடாதே. வேலை செய்யாமல் இருக்கவும் விரும்பாதே.
யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநம்ஜய। ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே॥ 2.48 ॥ |
பொருளாசையை வென்றவனே ! யோகத்தில் நிலை பெற்றவனாக, பற்றை விட்டு, வெற்றி தோல்விகளில் சமமாக இருந்துகொண்டு கடமைகளை செய். சமநிலையில் நிற்பதே யோகம் என்று சொல்லபடுகிறது.
தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத்தநம்ஜய। புத்தௌ ஷரணமந்விச்ச க்ருபணா: பலஹேதவ:॥ 2.49 ॥ |
அர்ஜுனா ! புத்தி யோகத்தை விட மிக சாதாரண செயல் நிச்சயமாக மிகவும் கீழானது. எனவே புத்தியில் சரணடை. பலனை நாடுபவர்கள் கீழானவர்கள்.
புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருததுஷ்க்ருதே। தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஷலம்॥ 2.50 ॥ |
புத்தி யோகத்தில் நிலை பெற்றவன் இந்த உலகில் புண்ணிய பாவங்கள் இரண்டையும் நீக்குகிறான். எனவே அந்த யோக நிலையை அடைவாய். யோகம் என்பது செயல்களை திறம்பட செய்வதாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாவது அத்தியாயம் (ஸாங்க்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, யோகம், பகவத்கீதை, நிலை, இரண்டாவது, ஸ்ரீமத், ஸாங்க்ய, அத்தியாயம், பயன், வேலை, யோகத்தில், புத்தி, இந்து, bhagavad, gita, அர்ஜுனா, கடந்தவனாக, சமநிலையில்