அறிவுக் கதைகள் 100 - 9. போகாத இடம்
ஒர் ஊரிலே குயவரும் கம்மாளரும் நெருங்கிய நண்பர்கள். பிழைப்பில்லை; பெரும்பசி-வெளியூருக்குப் புறப்பட்டனர்.
வழியிலே, ஊர் நடுவிலே அக்கிரகாரம்-திருமணம்: நடந்து கொண்டிருக்கிறது.
இருவரும் யோசித்தார்கள். நம் இருவருக்கும் பூணூல்தான் இருக்கிறதே. இந்த ஊரிலே நம்மை யார் அடையாளம் கண்டு பிடிப்பது-திருமண வீட்டிலே போய்ச் சாப்பிடலாமே, சாப்பிட்டுவிட்டே போகலாமே. என்ற முடிவுக்கு வந்து, ஐயர் வீட்டுத் திருமணத்திலே நுழைந்து விட்டார்கள். கும்பல்-ஒரே கூட்டம். இருவரும் சேர்ந்து போக முடியவில்லை. தனித்தனியாக பிரிந்து போய்ப் பந்தியில் உட்கார்ந்து விட்டார்கள்.
எல்லாம் பரிமாறிய பிறகு, பிராமணாள் எல்லாரும் கையில் தண்ணிரை வாங்கினார்கள். குயவரும் வாங்கி னார். எல்லோரும் கண்ணை மூடுவதைப் பார்த்தார்; தானும் மூடிக் கொண்டார்.
எல்லோரும் நீர் விளாவி, சாப்பிட்டுக் கொண்டிருந் தார்கள்,
குயவன் கண்ணைத் திறவாததால், மற்றவர்கள் உண்பதைக் காண முடியவில்லை, அதனால் கையில் நீரோடு கண்ணை மூடியபடியே உட்கார்ந்திருந்தார்.
சாம்பார் பரிமாற வந்த ஐயர்- 'என்னாங்காணும், குசப்பிராமணனாயிருக்கிறீரே. சாப்பிடுங்காணும்'--என்று சொன்னார்.
இவர் உடனே கண்ணை விழித்து, 'அதோ, கதவிடுக்கிலே உட்கார்ந்து கொண்டு சாப்பிடுகிற அந்தக் கம்மாளப் பையலா-என்னைக் குசவன்' என்று சொன்னான்; அவனைப் பார்த்துக்கிறேன்-என்று கூறியதும்,
பந்தியில் உள்ள அனைவரும் உண்ணாமல் எழுந்து கூடி—
பாவம்! இவர்கள்.
போகாத இடந்தனிலே போகவேண்டாம் என்ற 'உலக நீதி' யைப் படித்திருந்தால், இப்படி நடை பெற்றிராது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
9. போகாத இடம் - அறிவுக் கதைகள் 100 - Knowledge Stories - அறிவுக் கதைகள் - கண்ணை