முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » அறிவுக் கதைகள் » அறிவுக் கதைகள் 100 » 80. சாட்சிக்காரனின் சொத்து மதிப்பு
அறிவுக் கதைகள் 100 - 80. சாட்சிக்காரனின் சொத்து மதிப்பு
அடிக்கடி நீதி மன்றத்திற்கு வந்து பொய்ச்சாட்சி சொல்லிக்கொண்டே காலங் கழித்து வந்த ஒருவரை வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.
வக்கீல் : உமக்கு என்ன வேலை?
சாட்சி : பொதுமக்களுக்குத் தொண்டு செய்வது.
வக்கீல் : உமக்கு சொத்து ஏதேனும் உண்டா?
சாட்சி : ஆம். இருக்கிறது.
வக்கீல் : எல்லாம் ரொக்கமாகவா?. நிலமாகவா ? கட்டிடமாகவா ?
சாட்சி : கட்டிடமாக.
விக்கீல் : அதன் மதிப்பு எவ்வளவு
சாட்சி : ஒரு லட்ச ரூபாய் பெறும்.
வக்கீல் : ஊர்க்கடைசியில் கோவில் மதிற்சுவரை ஒட்டிப் போட்டிருக்கும் கூரைத் தாழ்வாரம் தானே உன் வீடு.
சாட்சி : ஆமாம். வக்கீல் : அதுவா ஒரு லட்சம் பெறும்?
சாட்சி : கட்டாயம் பெறும். அதற்கு மேலும் பெறும். ஒருவர் 95 ஆயிரம்வரை கேட்டார்; மறுத்து விட்டேன். 99 ஆயிரத்திற்குக் கேட்டாலும் தரமாட்டேன்.
வழக்கறிஞர் அயர்ந்து போனார். நீதிபதி சிரித்து மகிழ்ந்தார். என்ன செய்வது? இப்படியும் சில சாட்சிகளை நீதிமன்றங்கள் சந்திக்கின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 78 | 79 | 80 | 81 | 82 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
80. சாட்சிக்காரனின் சொத்து மதிப்பு - அறிவுக் கதைகள் 100 - Knowledge Stories - அறிவுக் கதைகள் - வக்கீல் , சாட்சி , பெறும்