முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » அறிவுக் கதைகள் » அறிவுக் கதைகள் 100 » 36. கிளியும் ஓநாயும்
அறிவுக் கதைகள் 100 - 36. கிளியும் ஓநாயும்
ஒரு காட்டிலுள்ள ஆலமரத்தின்மேல் அமர்ந்திருந்த கிளியும், கீழே நின்றிருந்த ஒநாயும் இவ்வாறு பேசிக் கொண்டன : - கிளி : ஒநாய் அண்ணே! ஏன் விசனமா இருக்கீங்க?
ஒநாய் : உனக்குச் சங்கதி தெரியாதா கிளித்தங்கச்சி.
நான் வேறே காட்டுக்கல்லவா போகப்போறேன்.
கிளி : ஏன் வேறு காட்டுக்குப் போறீங்க?
ஒநாய் : இந்தக் காட்டிலிருக்கிற புலியும் சிறுத்தையும்
என்னைக் கண்டால் கடிக்க வருதுங்க. மானும் முயலும் என்னைக் கண்டால் ஒடிப் போகுதுங்க. நான் இங்கே இருந்து என்ன பயன்?
கிளி : நீங்க போகிற காட்டிலே இப்படியெல்லாம் உங்க கிட்ட நடந்துக்க மாட்டாங்களா, என்ன? -
ஒநாய் : அந்தக் காட்டிலே இருக்கிற புலி சிறுத்தை
யெல்லாம் என்னைக் கண்டதும் தடவிக் கொடுக்குது; மானும் முயலும் என்னோடு ஓடி விளையாடுது.
கிளி : அப்படியா? அப்படியானால் நான் ஒரு யோசனை
சொல்கிறேன், கேள் அண்ணே! "உன் விஷப்பற்களையும், கூர்மையான நகங்களையும் இங்கேயே, இந்தக் காட்டிலேயே கழட்டி வைத்துவிட்டுப் போ!"
ஒநாய் : அதையெல்லாம் இங்கே கழட்டிப்போட்டு
விட்டு போனால், அந்தக் காட்டிற்குப்போய் நான் என்ன பண்ணுவேன்?
கிளி : அப்படி நீ செய்யவில்லையானால், வெகுசீக்கிரத்தில்
அந்தக் காடும் இந்தக் காடு மாதிரியே ஆகிவிடும் என்று:சொல்லிவிட்டுப் பறந்து சென்றது கிளி.
இதிலிருந்து காட்டின்மேல் எந்தத் தப்பும் இல்லை; ஒநாய் நடந்துகொள்ளும் முறையில்தான் தப்பு இருக்கிறது என்று அந்தக் கிளி செல்லாமல் சொல்லிவிட்டது. நமக்கும் இது ஒரு படிப்பினை அல்லவா?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 34 | 35 | 36 | 37 | 38 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
36. கிளியும் ஓநாயும் - அறிவுக் கதைகள் 100 - Knowledge Stories - அறிவுக் கதைகள் - கிளி , அந்தக், நான், ஒநாய் , என்ன, இந்தக், என்னைக்