கேள்வி எண் 95 - சட்டக்கேள்விகள் 100
95. நண்பர்கள் இடையே சண்டையில் ஒருவருக்கு கை முறிந்து விட்டது. உடனே செய்யவேண்டியது என்ன?
நான் மதுரையில் ஒரு பிரபல கல்லூரியில் படித்து வருகிறேன். என் பெயர் ஜெயச்சந்திரன், சமீபத்தில் எங்கள் கல்லூரியில் இரு நண்பர்கள் குழுவினரிடையே சண்டை ஏற்பட்டு திடீரென அடித்துக்கொண்டனர் அதில் ஒருவருடைய கை எலும்பு முறிந்து விட்டது. இந்நிலையில் சட்ட ரீதியாக உடனடியாக எதிர்கொள்ள வேண்டியவைகளை தெளிவாக கூறினால் நலம்.
- K.ஜெயச்சந்திரன்,திருமங்கலம்,
பதில் :
இது ஒரு நல்ல கேள்வி, அன்றாடம் மாணவர்கள், பொது மக்களிடையே காணப்படும் நிலை தான் இது. அதாவது இரு பிரிவினர்களுக்கிடையே சண்டை நடைபெறும் போது ஏற்படும் இழப்பினைப்பற்றி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 325ல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது இழப்பின் தன்மை பலவாறு பிரித்துக்காட்டப்பட்டுள்ளது சாதாரண இழப்பு, கடினமான இழப்பு (Simple Hurt and Grevious Hurt). மேற்கண்ட நிகழ்வில் எலும்பு முறிந்துவிட்டதாக கூறியுள்ளீர்கள். எலும்பு முறிந்துவிடுவதோ, பற்கள் விழுந்து விடுவதோ நேர்ந்திருப்பின் 7வருட சிறைத் தண்டனைவரை கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. சாதாரண இழப்பு, அதாவது சிறிய காயம், சிறிய ஸ்க்ராட்ச் போன்றவை நேரும்போது அவைகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதில்லை, ஆனால் மருத்துவ சிகிச்சை நிச்சயமாக தேவை என்கிற அளவுக்கு இழப்பு ஏற்படின், இழப்பு ஏற்படுத்தியவருக்கு 7 வருடம் வரை சிறைவாசம் உறுதியாகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, இழப்பு, எலும்பு, அதாவது, சாதாரண, hurt, சிறிய, சண்டை, முறிந்து, விட்டது, கல்லூரியில், ஜெயச்சந்திரன், நண்பர்கள்