கேள்வி எண் 89 - சட்டக்கேள்விகள் 100
89. கள்ளத்தனமாக தொலைபேசி இணைப்பை எடுத்து உபயோகிக்கும் நபர்கள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாமா?
ஐயா, நான் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வருகிறேன். மேலும் நான் எப்பொழுதும் சேவை பணிகளில் ஈடுபடுபவன். எனது வீட்டி னருகில் தொலைபேசி வழித்தடத்தில் கள்ளத்தனமாக இணைப்பை எடுத்து உபயோகித்து வருகின்றனர். இது பொது மக்களுக்கும், பொதுச்சொத்துக்கும் களங்கம் விளைவிக்கும் செயலாகவே நான் கருதுகிறேன். நான் அங்கு வசிப்பவன் என்ற முறையில் இது பற்றி காவல் நிலையத்தையோ அல்லது நீதிமன்றத்தையோ அணுகி புகார் அளிக்க முடியுமா ?
- J. களியவரதன், திருவண்ணாமலை
பதில் :
முதலில் உங்கள் சேவை மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள். தொலைபேசி இணைப்பினை திருட்டுத் தனமாக எடுக்கும் நபர் மீது யார் வேண்டுமானாலும் தாராளமாக புகார் அளித்து அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம். அதற்கு அந்த தொலைபேசி இணைப்பானது சம்பந்தப்பட்ட நபருடையதாகத்தான் இருக்கவேண்டுமென்று எவ்வித அவசியமும் இல்லை. இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 379ன் கீழ் (Sec 379) நீங்கள் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவுச் செய்து நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, நான், தொலைபேசி, மீது, புகார், தகவல், அறிக்கை, சேவை, திருவண்ணாமலை, கள்ளத்தனமாக, இணைப்பை, எடுத்து