கேள்வி எண் 87 - சட்டக்கேள்விகள் 100
87. 10 வருடங்களாக நடக்கும் சிவில் மற்றும் குற்ற வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
சிவில் மற்றும் குற்ற வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்கினை முடிவுக்கு கொண்டுவர இது சம்பந்தமான உச்சநீதிமன்ற தீர்ப்பினைப் பற்றிய விவரம் அளிக்கும்படி ஐயா திரு குணசேகரன் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
- K. சின்னசாமி, பெரம்பலூர்
பதில் :
குற்றவழக்கினைப் பொறுத்தவரை குற்றஞ்சாட்டப் பட்டவர் மைனராக இருக்கும் பட்சத்தில், அவர் மைனர் என்ற அடிப்படையைக் கொண்டு உச்சநீதிமன்றம் சில வரையறைகளை வகுத்து நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ஒரு வழக்கினை முடிக்கச் செய்து உத்தரவிட்டது. அது “Common Cause Vs Union of India & Ors” (AIR 1996) ஆகும். மற்றபடி அனைத்து வழக்குகளுக்கும் இது பொருந்தாது, நீங்கள் வரைவு 136ன் படி (Art.136) ஒரு கருணை மனுவை தாக்கல் செய்வதன் மூலம் (Mercy Petition)உங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, வழக்கினை, கொண்டுவர, முடிவுக்கு, குற்ற, சிவில்