கேள்வி எண் 86 - சட்டக்கேள்விகள் 100
86. எங்களது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?
நான் சென்னையில் வசிக்கிறேன். எனது குடும்ப உறுப்பினர் ஒருவர் மூலமாக பல சித்திரவதைகளுக்கு ஆளாகி குடும்பமே கவலையில் இருக்கிறோம். இந்த பிரச்னையானது வீட்டினருகிலுள்ள அனைவருக்கும் வெளிச்சமாகிவிட்டது. தொடர்ந்து எங்களை வதைத்து வரும் அந்த நபர் மீது பலமுறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த பலனும் இல்லை, காவல் ஆய்வாளர் என் னுடைய புகாரை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாத இந்நிலையில் நான் அந்த அதிகாரி மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க முடியுமா ?
- B. கோகிலவாணி, அம்பாசமுத்திரம்
பதில் :
குற்றவியல் நடைமுறை சட்டவரைவின்கீழ் ஒரு காவல் அதிகாரி உங்கள் புகாரை பதிவு செய்ய மறுக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் எல்லைக்குட்பட்ட காவல் துறை உயர் அதிகாரிக்கு(Deputy Commissioner of Police) பதிவுஅஞ்சல் மூலம் ஒரு புகார் அனுப்பினாலே போதுமானது. ஏனெனில் குற்றவியல் நடைமுறைசட்டப்பிரிவு 154(III)ன் கீழ் (Sec 154[III]) காவல்துறை அதிகாரி குற்ற விசாரணைக்காக அளிக்கப்படும் புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவரது கடமையாக உள்ளது.
அப்படியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நீங்கள் நீதிமன்றத்தை அணுகி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 190ன் கீழ் (Sec 190) மனு செய்வதன் மூலம் உங்களுக்கான நிவாரணம் உறுதி செய்யப்படும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, மீது, காவல், புகார், அதிகாரி, குற்றவியல், பதிவு, தகவல், கீழ், மூலம், அறிக்கை, உங்கள், நீங்கள், புகாரை, நான், எடுக்காத, நடவடிக்கையும், எந்த, காவல்துறை, நடவடிக்கை, முடியுமா, எடுக்க, அந்த