கேள்வி எண் 84 - சட்டக்கேள்விகள் 100
84. எனது கணவரின் கொடுமையினால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுப்பது?
எனக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது (அதாவது டிசம்பர் 2013) எனக்கு திருமணமான நாள் முதலே என் கணவர் என்னை தகாத வார்த்தைகளால் அசிங்கமாக பேசுவதும், அடிப்பதுமாக தொடர்ந்து துன்புறுத்துகிறார். என்னை எப்போதுமே சந்ததேகக் கண்ணுடனே பார்க்கிறார். எவ்வளவோ பொறுத்திருந்தேன் முடியவில்லை, இதற்கு மேல் என்னால் இவருடன் வாழவே முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டேன், வேறு வழியில்லாமல் கடந்த வாரம் இரவில் அவர் தூங்கிக் கெண்டிருக்கும்போது யாருக்கும் சொல்லாமல் வெளியே வந்துவிட்டேன். நான் தற்போது வேலை தேடிக் கொண்டிருக்கிறேன், நான் சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டியது என்ன? என் கணவரிடம் சொல்லிவிட வேண்டுமா? அவருக்கு சொல்லாமல் வேலை தேடலாமா? அவர் என்ன நடவடிக்கை என்மீது எடுக்கக்கூடும்?
V. சித்திரகலா, கோயமுத்தூர்
பதில் :
உங்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆவதாக கூறி யுள்ளீர்கள், இந்த நேரத்தில் நல்ல திருமண ஆலோசனை வழங்குபவரை அணுகினால் சற்று நலமாக இருக்கும் என நினைக்கிறேன் ஏனெனில் சமீப காலங்களில் நடைபெறும் திருமணங்களில் பெரும்பான்மையானவற்றில் இம்மாதிரியான சச்சரவுகள் சாதாரணமாகிவிட்டன. முடிந்தவரை உங்கள் கணவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் திருமண உறவை தொடர முயற்சி செய்யுங்கள். வேறு வழியே இல்லாத பட்சத்தில் நீங்கள் விவாகரத்து கோர குறைந்தது ஒரு வருடம் காத்திருத்தல் அவசியம், ஒரு வருட முடிவில் இருவரும் பரஸ்பர ஒப்பந்தத்துடன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகுவதன் மூலம் உங்கள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, என்ன, உங்கள், வேலை, நான், கணவரிடம், திருமண, சொல்லாமல், விவாகரத்து, அவர், எனக்கு, நடவடிக்கை, என்னை, வந்துவிட்டேன், வேறு, சட்டரீதியாக