கேள்வி எண் 82 - சட்டக்கேள்விகள் 100
82. புத்திசுவாதீனம் இல்லாதவளைத் திருமணம் செய்தால் சட்டப்படி குற்றமா?
சார், நான் திருமணம் செய்ய இருக்கும் பெண் சற்று அதிகமாக பேசக்கூடியவள், வெளியுலகம் தெரியாது, குழந்தையைப் போன்று நடந்துகொள்வாள், ஆனால் எல்லோரும் அவளை புத்தி சுவாதீனம் இல்லாதவள் என்றும் அவளைத் திருமணம் செய்தால் அது சட்டப்படி குற்றம் என்றும் கூறுகிறார்கள். எனக்கு குழப்பமாக இருக்கிறது, தங்களுடைய லாயர்ஸ் லைன் இதழின் நிரந்தர வாசகன் நான், தயவு செய்து என்னுடைய கேள்விக்கு பதிலளித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
- P. சந்தான பாரதி, காளையார்கோயில்
பதில் :
பொதுவாக புத்தி சுவாதீனம் இல்லாத பெண் என்பதை கணிப்பது சற்று சிரமம் தான், சட்டத்தின் பார்வையில் திருமணம் செய்ய இருக்கும் நபர், திருமண வேளையில் முழு சம்மதம் தருவதற்கான அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். திருமண வாழ்க்கைக்கு தகுதியின்றி அல்லது மகப்பேறு பெறுவதற்கான வாய்ப்பில்லாத அளவிற்கு புத்தி சுவாதீனம் இல்லாமல் இருந்தால் அந்த நபர் திருமணத்திற்குச் சம்மதம் கொடுத்தால் அதைச் சட்டம் ஏற்றுக் கொள்ளாது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், புத்திசுவாதீனம் இன்மை என்பது தீராத நோய் என்றே கருதப்படுகிறது. இவர்கள் திருமணத்தின் அடிப்படையையே புரிந்து கொள்ள மாட்டார்கள். அதனால்தான் இவர்களின் திருமணம் செல்லாது என்கிறோம். ஆனால் எப்போதோ ஒருவேளை இந்த நோயினால் பாதிக்கப்படுவர்களை திருமணத்திற்கு தகுதியற்றவர்கள் என்று கூறிவிட முடியாது. ஆகவே அவர்கள் எந்தவிதமான மன சஞ்சலமும் கொள்ள வேண்டாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, திருமணம், புத்தி, சுவாதீனம், என்றும், நபர், சம்மதம், கொள்ள, திருமண, பெண், சட்டப்படி, செய்தால், நான், செய்ய, புத்திசுவாதீனம், இருக்கும், சற்று