கேள்வி எண் 79 - சட்டக்கேள்விகள் 100
79. என் தந்தை வாங்கிய கடனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அவர் எங்களுடன் இல்லை. இந்த வழக்கிலிருந்து மீள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்?
ஐயா, என் பெயர் அரவிந்தன். நான் சென்னை மைலாப்பூரில் வசிக்கிறேன். என் தந்தை சில நபர்களிடம் ரூ.4 லட்சம் கடனாக பெற்றுள்ளார். பணம் கொடுத்தவர்களை நான் இதுவரை பார்த்ததே கிடையாது. மேலும் கடனை திருப்பிக் கொடுப்பதற்கான எந்த உறுதிமொழியும் நான் கொடுக்கவில்லை. தற்போது எனது தந்தை எங்களிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்கிறார். சில நாட்களுக்கு முன் எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் என்னை A2 வாக இணைத்துள்ளார்கள். இதிலிருந்து என்னைக் காத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்?
- பு.அரவிந்தன், சென்னை
பதில் :
நீங்கள் ஏதாவது ஒப்பந்தப் பத்திரமோ அல்லது உறுதிமொழி பத்திரமோ எழுதிக் கொடுத்திராத பட்சத்தில் மற்றும் உங்கள் தந்தையினுடைய கடனுக்கு இணைப்பு கொடுக்காத பட்சத்தில் (Co borrower) உங்கள் தந்தையினுடைய கடன் தொகை உங்களை எவ்விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது. உங்களுடைய தந்தையின் காலம் வரை இந்த கடனுக்கு நீங்கள் கட்டுப்பட முடியாது. மேலும் உங்கள் தந்தையின் காலத்திற்கு பிறகு கூட உங்கள் தந்தையின் பெயரிலுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வேண்டுமானால் ஈடாக கோரமுடியுமே தவிர, உங்களை நேரடியாக கடனை ஏற்கச் சொல்ல எந்த சட்டத்திலும் இடமில்லை. நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, உங்கள், நான், கடனுக்கு, தந்தையின், தந்தை, நீங்கள், பட்சத்தில், பத்திரமோ, தந்தையினுடைய, முடியாது, உங்களை, எந்த, மேலும், அனுப்பியுள்ளனர், நோட்டீஸ், வக்கீல், என்ன, செய்யவேண்டும், சென்னை, அரவிந்தன், கடனை