கேள்வி எண் 76 - சட்டக்கேள்விகள் 100
76. நான் சில நிறுவனங்களின் தவறுகளைப்பற்றி ஊடகங்களில் எழுதிவருகிறேன். அவர்கள் என்மீது மானநஷ்ட வழக்குத் தொடர முடியுமா?
நான் சில உற்பத்தி பொருட்கள் மற்றும் நிறுவனங்கள்மீது அவர்களுடைய தவறுதலான நடைமுறையை ஊடகங்களிலும், இணையதளத்திலும் எழுதி வருகிறேன். அதற்காக அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்கள். நஷ்டஈடு கோரி என் மீது வழக்கு தொடுக்க முடியுமா?
- க.பச்சையப்பன், கிருஷ்ணகிரி
பதில் :
நம்முடைய அரசியலமைப்புச்சட்டம் இந்திய குடிமக்கள் ஒவ்வொவருக்கும் தம் கருத்தை பதிவுச் செய்ய முழு சுதந்திரத்தைக் கொடுத்துள்ளது.- ஆனால், நீங்கள் செய்யும் பதிவுகள் உண்மையாக இருத்தல் வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 499 ல் குறிப்பிட்டுள்ள பத்து விதிகளில் ஏதாவது ஒரு விதியை மீறி உங்கள் செயல்பாடு இருக்கும் பட்சத்தில் நீங்கள் பிரிவு 500 ன்கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியாக நேரிடும். அதற்காக சம்பந்தப்பட்டவர்கள் உங்கள் மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடுக்க முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, இந்திய, தொடுக்க, நீங்கள், பிரிவு, உங்கள், வழக்கு, மீது, முடியுமா, அதற்காக, நஷ்டஈடு, கோரி, நான்