கேள்வி எண் 75 - சட்டக்கேள்விகள் 100
75. வழக்கு நிலுவையில் இருந்தபோது எனக்கு கிடைத்த வேலை தகுதியற்றதாகிவிட்டது. தற்போது வழக்கு முடிந்துவிட்டது. அந்த வேலையைப் பெற என்ன வழி?
வணக்கம் சார், என்னுடைய அண்ணன் மீது அவரது மனைவி தொடுத்த வழக்கில் என்னையும் பார்ட்டியாக (Co-accused) சேர்த்து தற்போது பிரிவு 323/149,504, 506(11). 498கி மற்றும் பிரிவு 3/4 ல் வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் என்னை சேர்த்துள்ளார். நான் தற்போது கல்லூரியில் பயின்று கொண்டிருக்கிறேன். இந்த வழக்கில் எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. வழக்கு நிலுவையில் உள்ளபோது எனக்கு ஒரு வங்கியில் வேலைக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் என் மீதான இந்த குற்றவழக்கினை மறைத்து அந்த வேலைக்கு மனு செய்தேன். பின்னர் என்னுடைய நற்பெயரைப்பற்றி காவல்துறையினர் விசாரணை செய்த போது என் மீதுள்ள வழக்கு கண்டுபிடிக்கப்பட்டு என்னை தகுதியற்றவர் பட்டியலில் சேர்த்துவிட்டது-. தற்போது அந்த வழக்கு முடிந்து நாங்கள் அனைவரும் நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் இதை நான் எப்படி எதிர்கொள்வது?
- S.T. பிரதீப் குமார், கோயமுத்தூர்
பதில் :
அரசு வேலையை பொறுத்தவரை இது பற்றி தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒருவரை தகுதியற்றவர் என்று கூறுவதற்கு அவர் மேல் ஏதாவது சிவில் மற்றும் குற்ற வழக்கு தொடுக்கப்பட்டு அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலன்றி அவரை தகுதியற்றவர்கள் பட்டியலில் சேர்க்க முடியாது. உங்களுடைய வழக்கினைப் பொறுத்தவரை நீங்கள் முதல் குற்றவாளி அல்ல. மேலும் உங்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட வேண்டும். நீங்கள் குற்றவாளி அல்ல என்று நிரூபணமாகி தீர்ப்பு வெளியான பின்பும் வங்கி உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு எந்த காரணமும் இருக்கமுடியாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, வழக்கு, தற்போது, குற்றவாளி, அந்த, நான், எனக்கு, அவர், பட்டியலில், பொறுத்தவரை, நிலுவையில், உங்கள், அல்ல, நீங்கள், தகுதியற்றவர், மீதான, வழக்கில், மீது, பிரிவு, என்னை, வேலைக்கு, எந்த, என்னுடைய