கேள்வி எண் 73 - சட்டக்கேள்விகள் 100
73. சொத்து வழக்கில் செட்டில்மென்ட் செய்து கொண்டோம். இந்நிலையில் நீதிமன்ற கட்டணத்தை திரும்பப் பெற முடியுமா?
ஐயா, நான் என்னுடைய சொத்து சம்பந்தமாக சிவில் வழக்கு தொடுத்துள்ளேன். அதற்கான வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் எங்கள் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் செட்டில்மென்ட் ஒப்பந்தம் செய்து கொண்டோம். இந் நிலையில் நான் நீதிமன்றத்தில் கட்டிய தொகையினை திரும்பப் பெற முடியுமா?
- கு.பார்த்தசாரதி, காஞ்சிபுரம்
பதில் :
நீங்கள் கட்டிய தொகையில் 50% திரும்பப் பெற முடியும்.ஆனால் அதற்கு முன்னர் உங்கள் இருவருக்கும் சமாதானம் ஏற்பட்டு செட்டில்மென்ட் ஆகியது நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டும். நீதிமன்றம் 50% தொகையை உங்களுக்கு திரும்ப அளிக்க உத்தரவிடக்கூடும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, திரும்பப், செட்டில்மென்ட், வழக்கு, இருவருக்கும், சமாதானம், நீதிமன்றத்தில், கட்டிய, முடியுமா, செய்து, கொண்டோம், சொத்து, நான்