கேள்வி எண் 72 - சட்டக்கேள்விகள் 100
72. எனது கணவரின் இரண்டாவது மனைவி எனது மைனர் பெண்ணை கொடுமைப்படுத்துகிறாள். இதுபற்றி நான் எங்கு புகார் அளிக்கவேண்டும்?
ஐயா, அவர்களுக்கு வணக்கம், எனது கணவரின் இரண்டாவது மனைவி என்னுடைய மைனர் பெண் குழந்தையை தொடர்ந்து கொடுமைப்படுத்திவருகிறாள். இதுபற்றி நான் எங்கு புகார் அளிக்க வேண்டும்? மேலும் எந்த பிரிவின் கீழ் இவர் மீது குற்றவழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரியப்படுத்தினால் நலம்.
- ஆர்.சியாமளா, சென்னை
பதில் :
முதலில், உங்கள் கணவரின் இரண்டாவது திருமணம் என்பதே சட்டதிற்கு புறம்பான செயலாகும். உங்கள் கணவருடைய இரண்டாவது மனைவிக்கு உங்களுடன் எவ்வித பங்கீடும் செய்ய அதிகாரம் இல்லை. நீங்கள் உடனே உங்கள் கணவர் மீது இரண்டாம் திருமணம் செய்த குற்றத்திற்காக காவல்துறையில் புகார் அளிப்பதுடன் உங்கள் பெண் குழந்தையை கொடுமைப்படுத்தியதற்காக உங்கள் கணவரின் இரண்டாவது மனைவி யின்மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யுங்கள். உங்களுக்கான தீர்வு விரைவில் கிடைக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, உங்கள், இரண்டாவது, கணவரின், எனது, புகார், மனைவி, மீது, பதிவு, செய்ய, வேண்டும், திருமணம், குழந்தையை, நான், எங்கு, மைனர், பெண், இதுபற்றி