கேள்வி எண் 69 - சட்டக்கேள்விகள் 100
69. என் கணவர் என்னுடன் இல்லை. வங்கியில் இருவரும் கூட்டாக வாங்கிய கடனிலிருந்து என் பெயரை நீக்க முடியுமா?
சமீபத்தில் என் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்கிறோம். நாங்கள் சேர்ந்து வாழ்ந்திருந்த காலத்தில் எங்களுடைய வீடு விரிவாக்க கட்டுமானத்திற்காக நாங்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து ஒரு வங்கியில் சில லட்சங்களை கடனாகப் பெற்றோம். தற்போது அந்த வீட்டில் அவர் மட்டுமே வசிக்கிறார். நாங்கள் கூட்டாக வாங்கிய கடனிலிருந்து என்னுடைய பெயரை நீக்க என்ன செய்யவேண்டும்? மனக்குழப்பத்தில் இருக்கிறேன் தயவு செய்து பதில் அளிக்கவும்.
- M.லட்சுமி, கரூர்
பதில் :
நீங்கள் இருவரும் பிரிந்து வாழும்பட்சத்தில் நீங்கள் வங்கி அதிகாரியை அணுகி கூட்டுக் கடனை தனிக்கடனாக மாற்றக் கோரி விண்ணப்பிக்கலாம். ஆனால் அதற்கு நீங்கள் இருவரும் சேர்ந்து வங்கியை அணுக வேண்டும். இல்லை யெனில் நீங்கள் இருவரும் பிரிந்து வாழும் நிலையில் மேலும் உங்களுக்கு அந்த வீட்டில் எந்த உரிமையும் இல்லாமலிருக்கும் பட்சத்திலும்கூட நீங்கள் இருவரும் சேர்ந்து வாங்கிய கடனைப் பொறுத்தவரை இருவருக்குமே கடனை அடைக்கக்கூடிய முழு பொறுப்பு உள்ளது. தவறும் பட்சத்தில் இருவருமே பிரச்னையை சந்திக்க நேரிடும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, இருவரும், நீங்கள், சேர்ந்து, நாங்கள், பிரிந்து, வாங்கிய, கூட்டாக, பதில், அந்த, கடனை, வீட்டில், நீக்க, வங்கியில், கடனிலிருந்து, பெயரை, இல்லை