கேள்வி எண் 66 - சட்டக்கேள்விகள் 100
66. முறைகேடுகள் பற்றி பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதற்கான சட்டத்தீர்வு?
சார், நான் 9வது படிக்கும் மாணவன், எனது நண்பன் படிக்கும் பள்ளியில் அவன் பல வருடங்களாக சக மாணவர்களால் பல வகைகளில் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளான். இம்மாதிரி புகார்களை பல முறை அந்த பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இம்மாதிரியான கொடுமைகளிலிருந்து மீள்வது எப்படி-? மெத்தனமாக செயல்படும் பள்ளி நிர்வாகத்தினரை உடனடி நடவடிக்கை எடுக்க வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்.
- K.விஸ்வநாதன், சேலம்
பதில் :
பள்ளிப்பருவத்தில் உங்களின் இந்த முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது. நீங்கள் அந்தப் பள்ளி நிர்வாகத்தைப் பற்றி தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஆணை யருக்கு ஒரு புகார் கடிதத்தை நேரடியாகவோ அல்லது பதிவுத் தபாலிலோ அனுப்பி வையுங்கள். இது மிக முக்கியமான விஷயமென்பதால் முதல்வரின் தனிப்பிரிவிற்கும் இந்த புகாரின் நகலை அனுப்பி பதில் கோரலாம். இதன் மூலம் நிச்சயமாக உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். ஒரு வேளை அவர்களுடைய நடவடிக்கையில் நீங்கள் திருப்தி அடையாவிட்டாலோ அல்லது நடவடிக்கையே இல்லாமல் போனாலோ மாநில மனித உரிமை ஆணையம் உங்க ளுக்கு உதவி செய்ய காத்திருக்கிறது. அவர்கள் மூலம் நீங்கள் நீதிமன்றத்தையும் நாட முடியும்.. கவலைப்படாதீர்கள் உங்களுக்கு சாதகமான தீர்வு உறுதி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, பள்ளி, நீங்கள், அல்லது, அனுப்பி, மூலம், உங்களுக்கு, பதில், படிக்கும், முறையிட்டும், நிர்வாகத்திடம், எவ்வித, நடவடிக்கையும், பற்றி, செய்ய