கேள்வி எண் 62 - சட்டக்கேள்விகள் 100
62. எங்கள் பெற்றோர் காதல் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. நாங்கள் நீதிமன்றத் திருமணம் செய்யமுடியுமா?
நான் விழுப்புரத்தைச் சேர்ந்த லாயர்ஸ் லைன் மாத இதழின் சந்தாதாரர் என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 4 வருடங்களாக ஒரு பெண்ணை மனதார காதலித்து வருகிறேன், நாங்கள் இருவரும் காதலிப்பது தெரிந்தும் தற்போது அவளுடைய பெற்றோர்கள் அவளுடைய விருப்பத்தை கேட்காமல் இன்னொருவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்துவிட்டனர், நாங்கள் இருவரும் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள் எனக்கு வயது 28, அவளுக்கு வயது 25. நாங்கள் இருவரும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் இருக்கிறோம். அதனால் நாங்கள் நீதிமன்றத்தின்மூலம் திருமணம் செய்து கொண்டு பின்னர் எங்கள் பெற்றோர்களிடம் தஞ்சம் அடையலாம் என்று எண்ணுகிறோம். நாங்கள் நீதிமன்றம் மூலம் திருமணம் செய்ய முடியுமா? எங்கள் குடும்பம் எங்களுக்கு எதிராக செயல்பட்டால் நாங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பதையும் பதில்களை தயவுசெய்து தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும். எங்களைப் போன்ற மக்களுக்காக தங்களின் இந்த இலவசப் பணி மேன்மேலும் தொடர நான் இறைவனைப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். நன்றி
- D.சந்திரன், விழுப்புரம்.
பதில் :
நீங்கள் இருவரும் திருமணத்திற்கான தகுதியுடையவர்கள், உங்கள் ஒருமித்த உணர்வுடன் நிகழும் திருமணத்தை தடை செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. நீங்கள் தாராளமாக நீதிமன்றம் மூலம் திருமணம் (Court Marriage) செய்யலாம். உங்களுக்கு உங்கள் பெற்றோர்கள் மூலமோ அல்லது யாரேனும் வெளி நபர்களின் மூலமோ அச்சம் இருப்பின் நீங்கள் உயர்நீதிமன்றத்தை அணுகி பாதுகாப்பு(Protection) கோரலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, நாங்கள், திருமணம், இருவரும், நீங்கள், எங்கள், செய்ய, நான், உங்கள், மூலமோ, மூலம், நீதிமன்றம், அவளுடைய, வயது, செய்து, பெற்றோர்கள்