கேள்வி எண் 45 - சட்டக்கேள்விகள் 100
45. வழக்குதாரர்கள் தலைமை நீதிபதியை நேரடியாக சந்தித்து வழக்கை துரிதப்படுத்த வேண்டி மனுகொடுக்கலாமா?
ஐயா, 2012-ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை பெஞ்ச் தீர்ப்பளித்த ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அதே ஆண்டு Writ Appeal செய்யப்பட்டது. வழக்கு தொடர்ந்ததில் எனக்கு எந்த சம்பந்தமுமில்லை. ஆனால், வழக்கின் தீர்ப்பில் எனக்கு சம்பந்தமுண்டு, இதுவரை Appeal செய்து 13 மாதங்களுக்கு மேல் ஆகின்றன. இன்னும் அதன் மீது தீர்ப்பு வரவில்லை. இதனை துரிதப்படுத்த என்ன செய்ய வேண்டும்? இது சம்பந்தமாக தலைமை நீதிபதியை என் போன்ற சாதாரண மக்கள் சந்தித்து இந்த வழக்கை விரைந்து நடத்த மனு கொடுக்க முடியுமா என்றும், வேறு ஏதாவது வழிகள் இருக்கின்றனவா என்றும் கூறுங்கள்.
- V.மீனா, கடலூர்
பதில் :
வழக்கு தொடர்ந்ததில் உங்களுக்கு எந்த சம்பந்தமுமில்லை என்று கூறியிருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு சம்பந்தமில்லாத நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட விஷயத்தில் எவ்விதத்திலும் தலையிட உரிமையில்லை. வழக்குகளின் கால தாமதம் என்பது வழக்கின் தன்மையை பொறுத்தது. இதன் பின்னணியில் பல்வேறு காரணங்களும் இருக்கக்கூடும். அதை நாம் விவாதிக்க இயலாது. பொறுத்திருங்கள் நீங்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பு நிச்சயம் வெளிவரும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, வழக்கு, சம்பந்தமுமில்லை, எந்த, வழக்கின், தீர்ப்பு, உங்களுக்கு, என்றும், எனக்கு, appeal, சந்தித்து, நீதிபதியை, வழக்கை, துரிதப்படுத்த, தலைமை, ஆண்டு, தொடர்ந்ததில்