கேள்வி எண் 43 - சட்டக்கேள்விகள் 100
43. சம்பளம் தராமல் சாப்ட்வேர் நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. எவ்வாறு நடவடிக்கை எடுப்பது?
ஐயா, நான் கடந்த 2 வருடங்களுக்கு, ஒரு முன் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். சமீபத்தில் 3 மாதத்திற்கு முன் அந்த நிறுவனம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டு அதன் தலைமையகமான வெளிநாட்டில் இயங்க தொடங்கி விட்டது. நாங்கள் வேலை இழந்தபோது, கடந்த 3 மாதத்திற்கான ஊதியமும் அளிக்கப்படவில்லை.
நாங்கள் சென்னையில் இருக்கிறோம். நிறுவனமோ அமெரிக்காவில் செயல்படுகிறது. எங்களுக்கான நிலுவை ஊதிய தொகையை, ணி-E-mail மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு கேட்டும் முறையான பதில் இல்லை. நாங்கள் அமெரிக்காவிற்கு சென்றும் பயன் பெற முடியாது. நாங்கள் அவர்களை சட்ட ரீதியாக அணுக முடியுமா?
- S.தென்றல்குமார், கோவை
பதில் :
நிச்சயமாக அணுகலாம். நீங்கள் அந்த நிறுவனத்தின் பெயரில் சென்னையில் இயங்கி வந்த கிளை தந்துள்ள சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜுகளையும், தங்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கான ஆவணங்களையும், வைத்து சென்னையின் பெருநகர நீதிமன்றத்திலேயே வழக்கை தாக்கல் செய்ய முடியும். சம்பந்தப்பட்ட அமெரிக்க தூதரகத்தில் புகார் செய்வதன் மூலமும், அதன் தொடர்ச்சியாக நீதிமன்றம் மூலமும் இழப்பீட்டை பெற முடியும். தொழிலாளர் நல வழக்குரைஞரை அணுகி, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நீதிமன்றத்தில் முறையிடுவதன் மூலம் தரப்படாத சம்பள பாக்கியையும் இழப்பீட்டையும் பெற முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, நாங்கள், முடியும், பதில், சம்பந்தப்பட்ட, சென்னையில், மூலமும், சாப்ட்வேர், கடந்த, முன், அந்த, நிறுவனம்