கேள்வி எண் 42 - சட்டக்கேள்விகள் 100
42. பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை, நீதிமன்றத்தை நாடலாமா?
ஐயா, அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர் நாளன்று பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புகார் மனுவும், ஆட்சியர் அலுவலக மனு ரசீதும் என்னிடம் உள்ளன. நான் நீதிமன்றத்தை நாடலாமா?
- K.துரை, மதுரை
பதில் :
தாராளமாக, உரிய ஆவணங்களின் அடிப்படையில் நீதி மன்றத்தை நாடலாம். (அல்லது) நீங்கள் புகாரின் தேதி, புகார் அளித்ததற்கான மனு, ரசீது ஆகியவற்றை இணைத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் விதிகள்படி மாவட்ட ஆட்சியர், தங்கள் புகார் மீது எடுத்த நடவடிக்கையின் விவரங்கள் அல்லது நடவடிக்கை எடுக்கப்படாததற்கான காரணங்களையும் கேட்டு பதில் தகவலை பெறலாம். தங்களுக்கு மாவட்ட ஆட்சியரிடம் இருந்து கிடைக்கப் பெறும் பதில் சட்டப்படி தவறு எனும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, புகார், மாவட்ட, பதில், நீதிமன்றத்தை, நடவடிக்கை, அல்லது, ஆட்சியர், நாடலாம், நாடலாமா, கொடுத்தும், பலமுறை, ஆட்சியரிடம்