கேள்வி எண் 41 - சட்டக்கேள்விகள் 100
41. அரசு விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமிப்பிலிருந்து எவ்வாறு மீட்பது?
எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் ஒரு நபர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். நாங்கள் கேட்டதற்கு போலியான ஆவணத்தை காட்டி என்னுடைய இடம் என்கிறார். எப்படி விளையாட்டு மைதானத்தை மீட்பது?
- எம்.பாண்டியன், கரூர்.
பதில் :
எதிர்தரப்பு நபர் வைத்திருக்கும் ஆவணங்கள் போலி என தெரிந்தால், அரசு ஆவணங்கள் போலியாக தயாரித்தல், அரசு நிலத்தை ஆக்கிரமித்தல், அரசு சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், போன்ற பிரிவுகளில் சம்பந்தப்பட்ட நில அபகரிப்புப் பிரிவில் புகார் செய்யலாம். அல்லது மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் தெரிவிக்கலாம். இல்லையெனில் வழக்குரைஞர் மூலமாக பொதுநலவழக்கு தொடர நீதி மன்றத்தை நாடலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, அரசு, விளையாட்டு, புகார், மாவட்ட, ஆவணங்கள், மீட்பது, மைதானத்தை, நபர்