கேள்வி எண் 40 - சட்டக்கேள்விகள் 100
40. திருமணமாகி 4 வருடங்களாக என் கணவருக்கும் எனக்கும் சரியான புரிதல் இல்லை. என் குழந்தைக்கு உணவு கூட கொடுப்பதில்லை. இந்நிலையில் என்ன செய்வது?
எங்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகின்றன, நாங்கள் ஒரே வீட்டில் வசிக்கிறோமே தவிர எங்களுக்குள் எவ்வித ஊடல்களோ, கூடல்களோ கடந்த 3 வருடங்களாக இல்லை, என் கணவர் சாப்பாட்டு செலவிற்கு கூட எனக்கும் என் குழந்தைக்கும் ஏதும் கொடுப்பதில்லை, அவருடைய அப்பாவும், தங்கையும் கொடுக்கும் தொல்லையை என்னால் தாங்க முடியவில்லை. தற்போது நான் என்ன செய்ய வேண்டும்?
- D. சந்தியா, திருப்பெரும்புதூர்.
பதில் :
நீங்கள் உடனடியாக உங்களுக்கு அருகிலுள்ள ஒரு நல்ல வழக்குரைஞரை அணுகி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125ன் கீழ் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் ஆதரவு அளித்திட கோரி (Maintenance) மனு செய்யுங்கள். மேலும் உங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கோடிட்டு காட்டி குடும்ப வன்முறைச் சட்டப் பிரிவுகளிலும் நீங்கள் அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, குழந்தைக்கும், நீங்கள், உங்களுக்கு, என்ன, கொடுப்பதில்லை, வருடங்களாக, எனக்கும், இல்லை, திருமணமாகி