கேள்வி எண் 37 - சட்டக்கேள்விகள் 100
37. மாமியார் மற்றும் கணவரின் சகோதரிகள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுப்பது?
ஐயா, நான் எனது மாமியார் மற்றும் கணவரின் சகோதரிகளால் தாக்கப்பட்டு, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். வழக்கு பதிய மறுத்து வருகிறார்கள். மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்.
- R. கிரிஜா, கீழ்ப்பாக்கம்
பதில் :
குடும்பப் பிரச்னைகளில் மனைவி, கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தாரால் தாக்கப்படுவது தண்டனைக்குரிய குற்றமாக இருப்பினும், இருவரும் சமாதானமடைய சிறு கால அவகாசம் கொடுப்பது என்பது காவல்துறையினரின் நடைமுறை வழக்கம் போலிருக்கிறது. தாங்கள் உடலளவில் அதிகம் காயம் அடைந்திருப்பின் மருத்துவமனையில் அனுமதியாகிவிடுவதே போதுமானது. உயர்அதிகாரிகளையும் அணுகலாம். அல்லது அருகில் உள்ள வழக்குரைஞரை அணுகி தங்களின் குறைகளைத் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, நடவடிக்கை, கணவரின், மாமியார்