கேள்வி எண் 34 - சட்டக்கேள்விகள் 100
34. கலப்புத் திருமணம் செய்துகொண்ட பெண் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, யாருடைய மதம், மற்றும் ஜாதியைக் குறிப்பிட வேண்டும்?
நான் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் 2012 ல் ஒரு சீக்கிய இனத்தவரை திருமணம் செய்து கொண்டேன். நான் ஒரு இந்து பெண். நான் தற்போது எந்த வகையை சேர்ந்த வளாவேன்? அதாவது பொது அல்லது ஓ.பி.சி. மற்றும் இந்துவா அல்லது சீக்கிய மதமா? நான் அரசு வேலைக்காக விண்ணப்பிக்க இருக்கிறேன். அதில் மதம், மற்றும் ஜாதி என்ற விவரங்களை குறிப்பிட வேண்டி உள்ளது.
- S .காயத்ரி, திண்டிவனம்
பதில் :
இந்திய சட்டப்படி, சட்டத்தின் பார்வையில் இந்துவும், சீக்கியரும் இந்து சட்டத்தின்கீழ் அமையப்பெற்றவர்கள் தான். ஆகையால் நீங்கள் இருவருமே மதம் மூலம் இந்துக்கள். சாதியைப் பொறுத்தவரை நீங்கள் எந்த ஜாதி என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, நான், மதம், எந்த, நீங்கள், அல்லது, இந்து, ஜாதி, சட்டத்தின், பெண், அரசு, குறிப்பிட, திருமணம், சீக்கிய