கேள்வி எண் 30 - சட்டக்கேள்விகள் 100
30. உயிலில் சொத்தின் அளவு தவறாக இருக்கும் பட்சத்தில் என்ன செய்வது?
வணக்கம் சார், நான் நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கிறேன். என் தந்தைக்கு நான் மற்றும் எனது அண்ணன் என்று இரண்டு பிள்ளைகள். எனது தந்தைக்கு சொந்தமாக 2.25 ஏக்கர் நிலத்தில் என் அண்ணனுக்கு 1.18 ஏக்கர் நிலத்தை 1992ல் பத்திரப்பதிவு செய்து கொடுத்துவிட்டார். பிறகு 1998 ஆம் ஆண்டு ஒரு உயில் எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். அந்த உயிலில் எனது அண்ணனுக்கு எழுதப்பட்ட நிலத்தினை தவறுதலாக 1.18 ஏக்கருக்கு பதிலாக 1.25 ஏக்கர் என்று எழுதிவிட்டார். தற்போது எனது அண்ணன் உயிலில் 1.25 ஏக்கர் எழுதப்பட்டிருப்பதாகக் கூறி அவற்றை எனக்கு தரமறுத்து, தானே அனுபவித்து வருகிறார். அவர் மீது வழக்கு தொடுக்க முடியுமா?
- J.பானுமதி, நாமக்கல்
பதில் :
உங்கள் விஷயத்தில் 1.18 ஏக்கர் நிலப்பரப்பு முறையாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு உங்கள் தந்தை தவறுதலாக எழுதிக் கொடுத்த உயில் பத்திரம் எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. சட்டத்தின் பார்வையில் 1.18 ஏக்கர் மட்டுமே முறையானதாக ஏற்றுக்கொள்ளப்படும். நீங்கள் உங்கள் உரிமையான 0.07 சென்ட் நிலத்தினை கேட்க நினைப்பது சட்டப்படி செல்லத்தக்க ஒன்றாகும். நீங்கள் ஒரு நல்ல சிவில் வழக்குரைஞரை அணுகுவதன் மூலம் இவற்றை எளிதில் பெற்றுவிடமுடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, ஏக்கர், எனது, உங்கள், உயிலில், உயில், நீங்கள், நிலத்தினை, தவறுதலாக, பிறகு, அண்ணனுக்கு, நான், நாமக்கல், தந்தைக்கு, அண்ணன், பத்திரப்பதிவு