கேள்வி எண் 29 - சட்டக்கேள்விகள் 100
29. விபத்தில் இறந்த, வாரிசில்லாத என் அத்தையின் சொத்தை அனுபவிக்க எனக்கு உரிமையுண்டா?
ஐயா என் பெயர் மங்கையர்கரசி நான் சென்னை நங்க நல்லூரில் வசித்து வருகிறேன். என்னுடன் வசித்துவந்த என் அத்தை சமீபத்தில் இறந்துவிட்டார். இவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஏற்கனவே ஒரு விபத்தில் இறந்துவிட்டனர். என்னுடைய அத்தைக்கு இங்கு ஒரு வீடும், வங்கியில் 15 இலட்சம் ரூபாய் பணமும் உள்ளது. எதிர்பாராத விதத்தில் திடீரென இறந்ததால் அவர் எந்த உயிலும் எழுதவில்லை. அதனால் அவருடைய சொத்தை அனுபவிக்க எனக்கு உரிமை இருக்கிறதா? என்று தயவு செய்து தெரியப்படுத்தவும்.
- S. மங்கையர்கரசி, சென்னை
பதில் :
உங்கள் அத்தைக்கு நீங்களே பாதுகாவலராக இருந்தால் அவருடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களுக்கான பத்திரங்களை வைத்து மாவட்ட நீதிமன்றத்தில் முறையாக “வாரிசுநாமா” அதாவது வாரிசுரிமைப் பத்திரம் (Succession Certificate) கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் அளித்த விண்ணப்பம் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு வேறு எவரும் சொந்தம் கொண்டாடி வராதபட்சத்தில் உங்களுக்கு வாரிசுரிமை பத்திரம் வழங்கப்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, அத்தைக்கு, அவருடைய, பத்திரம், சென்னை, மங்கையர்கரசி, சொத்தை, அனுபவிக்க, எனக்கு, விபத்தில்