கேள்வி எண் 25 - சட்டக்கேள்விகள் 100
25. மனைவிக்கு திருமணத்திற்கு முன்பே வேறு ஒருவருடன் தொடர்பு இருந்தது தெரியவந்தால் அவரை விவாகரத்து செய்யமுடியுமா?
ஐயா! எனக்கு ஒரு மாதத்திற்கு முன்தான் திருமணம் நடந்தது. என் மனைவிக்கு ஏற்கனவே ஒருவருடன் தொடர்பு இருந்தது பின்னர்தான் தெரியவந்தது, அவளுடைய ஈமெயில் களை பார்த்து அதை நான் தெரிந்துகொண்டேன், நான் முற்றிலுமாக ஏமாற்றப்பட்டுவிட்டேன். அதனால், நான் விவாகரத்து செய்ய நினைக்கிறேன். நாங்கள் இருவரும் மியூச்சுவலாக விவாகரத்து பெற்றுவிடலாம் என்று பேசும்போது, என்னிடம் 10,00,000 ரூபாய் கேட்கிறார்கள். நான் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்தால் தீர்ப்பு எப்படி இருக்கும். நான் கண்டிப்பாக 10,00,000 ரூபாய் கொடுக்க வேண்டுமா? எனக்கு அவ்வளவு வசதி இல்லை நான் மாதம் 25,000 ரூபாய் சம்பளத்தில் ஒரு பணியில் இருக்கிறேன், நாங்கள் ஒரு மாதம் கூட ஒன்றாக இல்லை, 24வது நாளே பிரிந்துவிட்டோம்.
- V. கருப்பசாமி, நெல்லை
பதில் :
இந்திய திருமணச் சட்டப்படி திருமணமாகி ஒரு வருடத்திற்குள் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ய முடியாது. உங்கள் விஷயத்தில் உங்களுக்கு ஒரு தீர்வு வேண்டுமானால் உங்கள் திருமணம் செல்லத்தக்கதல்ல (Nullity of Marriage) என்று அறிவிக்கச் சொல்லி மனு செய்யலாம். ஆனால், அதற்கும் உங்கள் மனைவியின் முழு ஒத்துழைப்பு தேவை. அதனால் நீங்கள் உங்களுக்குள் பேச்சுவார்த்தை மேற்கொண்டு செட்டில்மென்ட் செய்துகொள்வதே சாலச் சிறந்ததாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, நான், விவாகரத்து, உங்கள், ரூபாய், நாங்கள், மாதம், செய்ய, இல்லை, அதனால், தொடர்பு, எனக்கு, திருமணம், மனைவிக்கு, ஒருவருடன்