கேள்வி எண் 17 - சட்டக்கேள்விகள் 100
17. விவாகரத்து பெற்றபின் சீதனப்பொருட்களைத் திருப்பி அனுப்புவது எப்படி?
என் மகன் விவாகரத்து பெற்று 3 மாதங்கள் ஆகின்றன. அவர்கள் அளித்த சீதனப் பொருட்களை திரும்ப எடுத்துச் செல்லும்படி பலமுறை கூறியும் அவர்கள் எடுத்துச் செல்ல வரவில்லை. இதில் ஏதேனும் சூழ்ச்சி நடப்பது போல் தோன்றுகிறது. அவர்களுடைய பொருட்களை அவர்களிடத்தில் சேர்ப்பதற்காக சட்டரீதியிலான வழிமுறைகளைக் கூறவும்.
- D.கல்யாணசுந்தரம், போடிநாயக்கனுர்.
பதில் :
நீங்கள் சீதனமாகப் பெற்ற அந்தப் பொருட்களை எடுத்துச் செல்லுமாறு ஒரு வழக்குரைஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பலாம். அல்லது தாங்களே பதிவுத் தபாலில் கடிதமும் போடலாம். அந்தக் கடிதத்தில் குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர்கள் பொருட்களை எடுத்துச் செல்லவில்லை எனில் ஏதேனும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு அப்பொருட்கள் அளிக்கப்படும் என்று எழுதலாம். அந்தக் கெடுவுக்குப் பிறகு, அவற்றை ஏதேனும் ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கு அளித்துவிட்டு, அதற்கான அத்தாட்சி வாங்கி வைத்துக் கொண்டால், பயமின்றி இருக்கலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, பொருட்களை, எடுத்துச், ஏதேனும், இல்லத்துக்கு, ஆதரவற்றோர், அந்தக், விவாகரத்து