கேள்வி எண் 100 - சட்டக்கேள்விகள் 100
100. குடியிருப்புக்களுக்கு மத்தியில் அதிக ஒலி எழுப்பக்கூடிய நிறுவனம் இருப்பதால் தொடர்ந்து தொல்லை... என்ன செய்வது?
ஐயா, எங்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஒரு ஐஸ் பேக்டரி ஒன்று உள்ளது, குடியிருப்போர் அனைவரும் இந்த ஆலையினால் மிகவும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறோம். எந்த நேரமும் லாரிகள் பெரும் சத்தத்துடன் வந்து போன வண்ணமாகவே உள்ளன. மேலும் அதிகப்படியான மாசுகள் சுற்றிலும் பரவுவதால் மிகுந்த கவலைக்குள்ளாகியிருக்கிறோம். சிலரின் அறிவுரைக்கேற்ப நகராட்சி அதிகாரியிடம் புகார் அளித்தோம், எந்த பலனும் இல்லை, மாசுக்கட்டுப்பட்டு வாரியத்திலும் புகார் செய்துள்ளோம், எந்த பலனும் இல்லை, கடைசியாக மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளோம், அதற்கும் இதுவரை எந்த பதிலும் இல்லை. ஆகையால் குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்படும் இந்த ஆலையை அப்புறப்படுத்த சட்ட ரீதியாக எவ்வாறு அணுகுவது என்று தெளிவாக விளக்கம் அளித்தால், எங்கள் குடியிருப்புவாசிகள் அனைவரும் உங்களுக்கு கடமைப் பட்டவர்களாக இருப்போம். நன்றி!
- R . சதாசிவம், பொள்ளாச்சி
பதில் :
நீங்கள் முதலில் நகராட்சி அதிகாரிக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் ஒரு மனு அளியுங்கள். அந்த மனுவில் சம்பந்தப்பட்ட ஆலைக்கு நகராட்சி அலுவலகம் மூலம் ஏதேனும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்புங்கள். ஆம் எனில், அனுமதி கடிதத்தின் நகல் கேட்டு விண்ணப்பிக்கவும்.
மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், மேற்கண்ட RTI Act. 2005 ன் மூலம், தாங்கள் அனுப்பிய புகார் கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் கோரி மனுச் செய்யவும்
மேற்கண்ட இரண்டு கடிதத்திற்கும் தங்களுக்கு உரிய பதில் வராமல் இருந்தாலோ, அல்லது சட்டத்திற்கு புறம் பான மேம்போக்கான பதில் அளிக்கப்பட்டிருந்தாலோ நீங்கள் உயர்நீதிமன்றத்தை அணுகி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 133ன் கீழ் மனு செய்வதன் மூலம் அந்த ஆலையை அப்புறப்படுத்துவதற்கான ஆணையை எளிதில் பெற முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, எந்த, புகார், மத்தியில், பதில், மூலம், நகராட்சி, இல்லை, எங்கள், அந்த, அனுமதி, கடிதத்தின், மேற்கண்ட, கீழ், சட்டம், அனைவரும், பலனும், ஆலையை, குடியிருப்புகளுக்கு, நீங்கள், மேலும்