முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » தாமஸ் ஜெஃபர்சன் (கி.பி.1743 - கி.பி.1826)
தாமஸ் ஜெஃபர்சன் (கி.பி.1743 - கி.பி.1826)
அமெரிக்காவின் மூன்றாவது குடியரசுத் தலைவரும், சுதந்திர அறிக்கையை எழுதியவருமான தாமஸ் ஜெபஃர்சன் 1743இல் வெர்ஜீனியாவிலுள்ள ஷாட்வெல்லில் பிறந்தார். அவர் தந்தையார் நிலத்தை அளக்குகம் பணி புரிந்தார். தோட்ட முதலாளியாகவும் இருந்தார். அவர் தம் மகனுக்குப் பெரும் சொத்தை விட்டுச் சென்றார். ஜெஃபர்சன் ஈராண்டுகள் வில்லியம் மேரி கல்லூரியில் பயின்றார். ஆனால் பட்டம் பெறாமலே அதை விட்டு விலகினார். அதன் பிறகு பல ஆண்டுகளாகச் சட்டம் பயின்றார். 1767இல் அவர் வெர்ஜீனியாவில் வழக்குரைஞரானார். அடுத்த ஏழு ஆண்டுகளாக அவர் வழக்குரைஞராகவும், தோட்ட முதலாளியாகவும் இருந்து வந்தார். அப்போது
வெர்ஜீனியா மாநிலச் சட்டமன்றத்தின் கீழ் அவையின் உறுப்பினரானார்.
"எ சம்மரி வியூ ஆஃப் தி ரைட்ஸ் ஆஃப் பிரிட்டிஷ் அமெரிக்கா" (பிரிட்டிஷ் அமெரிக்கா உரிமைகளின் சுருக்கம்) என்னும் தமது முதல் முக்கியமான கட்டுரையை 1774இல் ஜெபஃர்சன் எழுதினார். அடுத்த ஆண்டில் அவர் இரண்டாம் கண்ட மாநாட்டிற்கு வெர்ஜீனியாவின் பிரதிநிதிகளுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1776இல் அவர் சுதந்திர அறிக்கையை தீட்டினார். அவ்வாண்டின் பிற்பகுதியில் அவர் வெர்ஜீனியச் சட்டமும், அறிவைப் பரவலாகப் பரப்பும் பொதுக் கல்வி சார்ந்த மசோதாவும் அவருடைய இரு முக்கிய திட்டங்களாகும்.
எல்லோரும் பெறக்கூடிய பொது தொடக்கக் கல்வி, அறிவுத் திறமையுடையோர் உயர்கல்வி பெறக்கூடிய அரசாங்கப் பல்கலைக் கழகம், படிப்பிற்காக உதவிப் பணம் வழங்குதல் போன்றவை ஜெஃபர்சனின் கல்வித் திட்டங்கள். அவருடைய கல்வித் திட்டத்தை அன்றைய வெர்ஜீனிய அரசு ஏற்கவில்லை. ஆயினும் அது போன்ற திட்டங்களைப் பிறகு ஏறக் குறைய எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.
மத உரிமை பற்றிய சட்டம் மிகவும் முக்கியமானது. அது முழு சமயப் பொறுமைக்கு வழி வகுத்ததுடன் அரசையும் சமய நிறுவனத்தையும் முற்றிலும் தனித் தனியாகப் பிரித்தது. (அதற்கு முன்னால் ஆங்கிலிக்க சமயம்
வெர்ஜீனியாவின் சட்டபூர்வமான சமயமாக இருந்தது). ஜெஃபர்சனின் திட்டத்திற்கு எதிர்ப்பு இருந்தது. ஆனால் இறுதியில் வெர்ஜீனிய சட்டமன்றம் (1786இல்) அதை நிறைவேற்றியது. விரைவில் பிற மாநிலங்களுக்கு அக்கருத்துகளைத் தம் அடிப்படை உரிமைகளின் பட்டியலில் ஏற்றுக் கொண்டன. பிறகு அமெரிக்க அரசியலமைப்பில் அவை இடம் பெற்றன.
1779 முதல் 1781 வரை ஜெஃபர்சன் வெர்ஜீனியாவின் ஆளுநராகப் பணியாற்றினார். பிறகு அவர் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார். தமது ஓய்வு காலத்தில் 'நோட்ஸ் ஆன் தி ஸ்டேட் ஆஃப் வெர்ஜீனியா' (வெர்ஜீனியா மாநிலம் பற்றிய குறிப்புகள் எனும் தமது ஒரே நூலை எழுதினார். அதில் அவர் அடிமை முறையை மிகத் தெளிவாக எதிர்த்தார். 1782 இல் ஜெஃபர்சனின் துணைவியார் இறந்தார். (அவர்கள் 10 ஆண்டுகள் திருமண வாழ்க்கை நடத்தினர். அவர்களுக்கு 9 குழந்தைகள் இருந்தனர்). அப்போது அவர் ஓரளவு இளைஞராக இருந்த போதிலும் மறுமணம் புரிந்து கொள்ளவில்லை.
விரைவில் ஜெஃபர்சன் ஓய்விலிருந்து விடுப்ட்டு நாடாளுமன்றத்தில் நுழைந்தார். நாணயத்தை தசம முறையில் பகுக்க வேண்டுமென்று அவர் கொண்டுவந்த திட்டத்தை நாடாளுமன்றம் ஏற்றது. ஆயினும், எடைகளையும் அளவைகளையும் அவ்வாறே தசம முறையில் பகுக்க வேண்டுமென்று அவர் கூறியதை நாடாளுமன்றம் ஏற்கவில்லை). (மீட்டர் முறை வகுக்கப்பபடுவதற்கு முன் இது நிகழ்ந்தது). அவர் மற்றொரு திட்டத்தையும் பரிந்துரைத்தார். அது எல்லா புதிய மாநிலங்களையும் அடிமை முறையை ஒழித்திருக்கும். ஆனால், ஒரே வாக்கினால் அது தோல்வியுற்றது.
1784இல் ஜெஃபர்சன் பிரான்சுக்கு தூதாண்மைப் பணிக்காகச் சென்றார். விரைவில் அங்கு அவர் பெஞ்சமின் பிராங்ளினுக்குப் பிறகு அமெரிக்க நாட்டுத் தூதுவராகப் பதவியேற்றார். ஐந்து ஆண்டுகள் பிரான்சில் இருந்தார். ஆகவே, அமெரிக்க அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப் பெறுவதை அவர் ஆதரித்த போதிலும், வேறு பலரைப் போல் அவரும் அடிப்படை உரிமைகளின் பட்டியல் அதில் இணைக்கப் பெற வேண்டுமென்று உறுதியாக நம்பினார்.
1789இல் ஜெஃபர்சன் அமெரிக்கா திரும்பினார். விரைவில் அமெரிக்காவில் முதல் அரசுச் செயலாளராக அவர் நியமிக்கப் பெற்றார். அமைச்சரவையில் ஜெஃபர்சனுக்கும் நிதிச் செயலாளராக இருந்த அலெக்ஸாண்டர் ஹாமில்ட்டனுக்கும் பிணக்கு ஏற்பட்டது. ஹாமில்ட்டனின் அரசியல் கருத்துகள் ஜெஃபர்சனின் கொள்கைகளை ஆதரித்தவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாட்சிக் கட்சியை அமைத்தனர். ஜெஃபர்சனின் கொள்கைகளை ஆதரித்தவர்கள் ஒருங்கிணைந்து மக்களாட்சி குடியாட்சிக் கட்சியை நிறுவினர். இக்கட்சியே நாளடைவில் மக்களாட்சிக் கட்சியானது.
1796இல் ஜெஃபர்சன் குடியரசுத் தலைவரின் பதவிக்கு வேட்பாளராகப் போட்டியிட்டார். ஆனால் ஜான் ஆடம்சுக்கு அடுத்த படியான வாக்குகளையே பெற்றார். அக்கால அரசியலமைப்பு விதிகளுக்கேற்ப அவர் குடியரசின் துணைத் தலைவரானார். 1800 ஆம் ஆண்டில் திரும்பவும் குடியரசுத் தலைவரின் பதவிக்குப் போட்டியிட்டார். அப்போது அவர் ஆடம்சைத் தோற்கடித்தார்.
குடியரசுத் தலைவரான ஜெஃபர்சன் தம் முந்திய எதிரிகளைப் பண்புடனும் ஒப்புரவுடனும் நடத்தினார். இவ்வாறாக அவர் அமெரிக்காவில் ஒரு முன்மாதிரியான மரபை உருவாக்கினார். அவருடைய பதவிக் காலத்தில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க அரசாங்க நடவடிக்கை லூயிசியானாவை அமெரிக்கா வாங்கியதாகும். அது நிலையான விளைவை ஏற்படுத்தியது. லூயிசியானா அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போல் ஏறக்குறைய இரு மடங்கு நிலப் பரப்புடையது. லூயிசியானாவை வாங்கியது, வரலாற்றிலேயே மிகப் பெரிய நிலப் பகுதியை அமைதியான முறையில் வாங்கிய ஒரே நிகழ்ச்சியாக இருக்கலாம். இதன் பயனாக அமெரிக்கா ஒரு பெரும் அரசாக மாறியது. இது பெரும் விளைவுகளை ஏற்படுத்திய நிகழ்ச்சியாகும். லூயிசியானாவை வாங்கிய புகழ் ஒரு தனி அமெரிக்கரைச் சேர வேண்டுமெனில், அது ஜெஃபர்சனாக இருக்க முடியாது. அவ்வளவு பெரிய நிலப் பகுதியை வாங்க அவர் திட்டமிட்டதில்லை. பாரிஸிலிருந்த அமெரிக்கத் தூதர்களான ராபர்ட் லிவிங்ஸ்டனும், ஜேம்ஸ் மன்றோனவு தாம் அதை வாங்கக் கூடிய வாய்ப்பைக் கண்டதும், தம் தூதாண்மைக் கட்டளைகளையும் மீறி, அப்பெரும் பகுதியை வாங்கும் நோக்குடன் அதற்கென ஏற்பாடுகளைத் தொடங்கினர். (தமது கல்லறை வாசகத்தை எழுதிய ஜெஃபர்சன் லூயிசியானாவை வாங்கியதைத் தம் முக்கிய சாதனைகளுள் சேர்க்காதது இங்கு குறிப்பிடத்தக்கது).
1804இல் ஜெஃபர்சன் மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆயினும் 1808இல் அவர் மூன்றாம் முறையும் அப்பதவிக்குப் போட்டியிட விரும்பவில்லை. இவ்வாறாக அவர் ஜார்ஜ் வாஷிங்டன் ஏற்படுத்திய மரபை உறுதிப்படுத்தினார். 1809இல் ஜெஃபர்சன் ஓய்வு பெற்றார். வெர்ஜீனிய சட்டப் பல்கலைக் கழகத்தை நிறுவுவதில் (1819) அவர் எடுத்த முயற்சி ஒன்றுதான் ஓய்வு பெற்ற பிறகு அவர் ஈடுபட்ட அரசாங்க நடவடிக்கையாகும். அவர் 43 ஆண்டுகளுக்கு முன் வெர்ஜீனிய சட்ட மன்றத்தில் பரிந்துரைத்த கல்வித் திட்டத்தின் ஒரு பகுதி இவ்வாறு இறுதியின் நடைமுறைப்படுத்தப் பெற்றது. 83 ஆண்டுகளாக நலமான வாழ்க்கை வாழ்ந்த பின் ஜெஃபர்சன் சுதந்திர அறிக்கையின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு நாளில், அதாவது ஜூலை 4, 1826இல் இறந்தார்.
ஜெஃபர்சன் அரசியல் திறமையுடன் வேறு பல திறமைகளையு பெற்றிருந்தார். அவருக்கு 5 அல்லது 6 அயல்நாட்டு மொழிகள் தெரியும். இயற்கை அறிவியலிலும் கணிதத்திலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. அவர் விஞ்ஞானப் பயிர்முறையை வெற்றிகரமாகப் பயன்படுத்திய தோட்ட முதலாளியுமாவார். அவர் உற்பத்தியாளராகவும், சிறிய அளவில் புதியவை கண்டுபிடிப்பவராகவும், திறமைமிகு கலைஞராகவும் விளங்கினார்.
ஜெஃபர்சனின் திறமைகளும், தகுதிகளும் சிறப்புற அமைந்துள்ளமையால், வரலாற்றில் அவரால் ஏற்பட்ட விளைவுகளை நாம் மிகைப்பட மதிப்பிடக்கூடும். அவருடைய சிறப்பை மதிப்பிடும்போது, சுதந்திர அறிக்கை யிலிருந்து தொடங்குதல் பொருந்துமென நினைக்கிறேன். ஏனெனில், அதைத் தீட்டியதே அவருடைய சிறந்த சாதனையெனக் கருதப்படுகின்றது. சுதந்திர அறிக்கை அமெரிக்க அரசியலமைப்பின் ஒரு பகுதியன்று என்பதை முதலில் நாம் நினைவிலிருத்த வேண்டும். அமெரிக்க இலட்சியங்களை எடுத்துரைப்பதே அதன் முக்கிய சிறப்பு. மேலும் அதில் காணப்படும் கருத்துகள் ஜெஃபர்சனின் சொந்தக் கருத்துகளல்ல. அவை பெரும்பாலும் ஜான் லாக் எழுதிய கருத்துகளிலிருந்து பெறப்பட்டவை. சுதந்திர அறிக்கை ஒரு தனி முதல் தத்துவமன்று. அத்தகைய தத்துவமாகவும் அது கருதப்படவில்லை. மாறாக, ஏற்கனவே அமெரிக்கர் பலர் நம்பிவந்த கருத்துகளை அது சுருக்கமாக வெளியிட்டது.
மேலும், சுதந்திர அறிக்கையை வரைவதில் ஜெஃபர்சன் கையாண்ட எழிலார்ந்த சொல்லாக்கம், அமெரிக்கர்கள் சுதந்திரத்தை அறிக்கையிடக் காரணமாக இருந்ததில்லை. ஏப்ரல் 1755-லேயே (சுதந்திர அறிக்கை வெளியாவதற்கு ஓராண்டுக்கு முன்னே) புரட்சிப் போர் தொடங்கிவிட்டது. லெக்ஸிங்டன் கன்கார்டு போர்கள் நடைபெற்று விட்டன. அப்போர்களுக்குப் பிந்திய மாதங்களில் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளில் நெருக்கடி தோன்றியது. அவை உடனே சுதந்திரம் கேட்பதா, ஆங்கிலேய அரசாங்கத்துடன் இணக்க உடன்பாடு செய்து கொள்வதா எனும் கேள்வி எழுந்தது. 1776இல் இளவேனிற்காலத்தில் கூடிய கண்ட மாநாட்டில் உடனே சுதந்திரம்
கேட்க வேண்டுமென்ற உணர்ச்சியே ஓங்கி நின்றது. அப்போது ஜூன் 7ஆம் நாளன்று, குடியேற்ற நாடுகள் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்று விடடதாக அறிக்கையிட வேண்டுமென்று கூறியவர் ஜெஃபர்சன் அல்லர். வெர்ஜீனியாவைச் சேர்ந்த ரிச்சர்டு ஹென்றி லீ ஆவார். மாநாடு லீயின் தீர்மானத்தை ஒரு வாரம் ஒத்திப் போட்டது. அது ஏன் சுதந்திர அறிக்கையிட வேண்டுமென்பதற்குரிய காரணங்களை எடுத்துரைக்கும் பொது அறிக்கையைத் தயார் செய்வதற்காக ஜெஃபர்சனின் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. (குழுவின் மற்ற உறுப்பினர்கள் ஜெஃபர்சனைத் தனியாகவே அவ்வறிக்கையை எழுதுமாறு அனுமதித்தனர்). ஜூலை முதல் நாளன்று மாநாடு லீயின் தீர்மானத்தை எடுத்துக் கொண்டது. மறுநாள் வாக்கெடுப்பின் போது அதை ஒரேமனதாக மாநாடு ஏற்றுக் கொண்டது. ஜூலை 2 ஆம் நாள் நடைபெற்ற அந்த வாக்கெடுப்பின்போதுதான் சுதந்திரத்தை ஆதரிக்கும் முக்கிய முடிவு ஏற்றுக் கொள்ளப் பட்டது. அவ்வாக்கெடுப்பிற்கு பிறகுகதான் ஜெஃபர்சன் தீட்டிய அறிக்கை வாதத்திற்கு வந்தது. இரு நாட்கள் கழித்து ஜூலை 4, 1776இல் அதை சில (திருத்தங்களுடன்) மாநாடு ஏற்றுக்கொண்டது.
பலர் நினைப்பதுபோல் உண்மையிலேயே சுதந்திர அறிக்€ அத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லையெனினும், ஜெஃபர்சனின் பிற சாதனைகள் அவருக்கு இப்பட்டியலில் இன்னும் உயர்ந்த இடத்தை அளிக்கலாமல்லவா? ஜெஃபர்சன் தமது கல்லறை வாசகத்தில் தம்மை மக்கள் நினைக்க வேண்டுமென்று விரும்பும் வேறு இரு சாதனைகளைக் குறிப்பிடுகிறார். அவற்றுள் ஒன்று வெர்ஜீனிய பல்கலைக் கழகத்தை நிறுவிய பணி, உண்மையிலே இப்பணி புகழ்ச்சிக்குரியதாக இருப்பினும், இப்பட்டியலில் உயரிடம் பெறத்தக்க போதிய முக்கியத்துவத்தை இது பெறாது. மற்றொன்று அவர் எழுதிய 'ஸ்டாச்சூட் ஆஃப் வெர்ஜீனியா ஃபார் ரெலிஜியஸ் ஃபிரீடம்' (மத உரிமை வழங்கும் வெர்ஜீனியச் சட்டம்) எனும் நூல். இதுவும் முக்கியமானதுதான் ஜெஃபர்சனுக்கு முன்பே ஜான் லாக், வால்ட்டேர் போன்ற பல புகழ் பெற்ற தத்துவ அறிஞர்கள் சமய உரிமை பற்றிப் பொதுவான கருத்தை எடுத்துரைத்திருந்தனர். ஆயினும், ஜெஃபர்சனின் சட்டம் லாக் ஆதரித்த கொள்கைகளைவிட விரிவானதாக இருந்தது. மேலும், ஜெஃபர்சன் ஓர் அரசியல்வாதி. ஆகவே அவர் தமது திட்டத்தைச் சட்டமாக்குவதில் வெற்றி பெற்றார். ஜெபர்சனின் கருத்துகள் பிறகு பிற மாநிலங்கள் அடிப்படை உரிமைகளைத் தீட்டுவதற்கு வழி வகுத்தன.
ஜெஃபர்சன் அடிப்படை உரிமைகளை அரசியலமைப்பில் இணைக்க வேண்டுமென்று விரும்பியவர்களின் கருத்தை எதிரொலித்தார். அவர் அவர்களின் அறிவார்ந்த தலைவராக விளங்கினார். ஆனால், 1784 முதல் 1789 வரை ஜெஃபர்சன் அமெரிக்காகவில் இல்லாததால் அரசியலமைப்பு புனையப் பெற்ற பிறகு அம்முக்கியமான காலத்தில் அடிப்படை உரிமைகளை இணைக்குமாறு நிகழ்ந்த போராட்டத்திற்குத் தலைமை தாங்க முடியவில்லை. தாமஸ் மாடிசன் தாம் நாடாளுமன்றம் அரசியலமைப்புத் திருத்தங்களை நிறைவேற்றுவதில் பெரும் பங்கு பெற்றார். (ஜெஃபர்சன் அமெரிக்காவுக்குத் திரும்புமுன் செப்டம்பர் 25, 1789இல் நாடாளுமன்றம் அரசியலமைப்புத் திருத்தங்களை நிறைவேற்றியது.)
அமெரிக்காவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியவை ஜெஃபர்சனின் அதிகாரபூர்வமான செயல்களல்ல. அவரின் நோக்கங்களே எனப் பலர் சொல்லக்கூடும். ஆயினும், ஜெஃபர்சனின் கருத்துகளை அமெரிக்கர்கள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது ஐயத்திற்குரியது. தாமஸ் ஜெஃபர்சனின் பெயரைப் புகழ்வோர் பலர் அவருடைய கொள்கைகளுக்கு முரணானவற்றை ஆதரிக்கின்றனர். எடுத்துக்காட்டாக இன்று நாம் 'சிறிய அரசாங்கம்' என்பதை ஜெஃபர்சன் ஆர்வமுடன் ஆதரித்தார். அவர் தமது தொடக்க விழா உரையில், பயன்படுத்திய சொற்றொடர் "ஒருவர் மற்றவருக்குத் தீங்கு விளைவிக்காமல் தடுத்து, மற்றபடி அவர்களைத் தொழிலிலும் வாழ்க்கை முன்னேற்றத்திலும் தம் வழியே செல்வதற்கு உரிமையளிக்கும் அறிவார்ந்த செயல் குறைந்த அரசாங்கம்" எனக் குறிப்பிடுகின்றது. ஒரு வேளை ஜெஃபர்சனின் கருத்து சரியானதாக இருந்திருக்கலாம். ஆயினும் கடந்த 40 ஆண்டு காலத் தேர்தல்கள் அவருடைய கருத்துகளைப் பெரும்பான்மையான அமெரிக்கர் ஏற்கவில்லை என்பதைக் காட்டுகின்றன. அரசியலமைப்புக்கு உரை விளக்கம் அளிக்கும் இறுதி அதிகாரம் தலைமை நீதிமன்றத்திற்கு இருக்க வேண்டும். ஆகவே, அது நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தை அரசியலமைப்புக்கு முரணானதெனத் தீர்ப்பிடலாம் எனும் கருத்தை ஜெஃபர்சன் வன்மையாக எதிர்த்தார். அத்தகைய கருத்து மக்களாட்சி அரசாங்கக் கொள்கைக்கு முரணானதெனக் கருதினார்.
மேலேயுள்ள பகுதிகளிலிருந்த, ஜெஃபர்சனினால் எவ்வகையான விளைவுகளும் ஏற்படவில்லை எனவும், இந்நூலில் அவருக்கு இடமில்லை எனவும் நினைக்கத் தோன்றலாம். சில வேளை விவரங்களை நுணுக்கமாகப் பார்க்கும்போது முழுக் காட்சியை நாம் காண்பதில்லை. ஆகவே, ஜெஃபர்சனின் முழு வாழ்க்கையையும் மொத்தமாகப் பார்ப்போமேயானால், அவரை ஏன் "மனித சுதந்திரத்தின் ஒப்புயர்வற்ற ஆதரவாளர்" என்கிறோம் என்பது புலனாகும்.
ஜெஃபர்சனை ஜார்ஜ் வாஷிங்டனை விட உயர்வாகவா, தாழ்வாகவா மதிப்பிடுவது? அமெரிக்க சுதந்திரத்தையும் மக்களாட்சி நிறுவனங்களையும் சிந்தனையாளரும், செயல் வீரரும் ஒருங்கிணைந்து உருவாக்கினர். இரு வகையினரும் இன்றியமையாதவர்களாக இருப்பினும், பொதுவாக கருத்துகளே முக்கியமானவையெனக் கருதுகிறேþன். செயலைப் பொறுத்தவரையில் ஜார்ஜ் வாஷிங்டன் பெரும் பங்காற்றினார் என்பது எளிதில் புலனாகும். கருத்துகளைப் பொறுத்த வரையில், ஜெஃபர்சன், தாமஸ் மாடிசன் போன்ற அமெரிக்கர்களையும், ஜான்லாக், வால்ட்டேர் போன்ற பல ஐரோப்பியரையும் அப்பெருமை சாரும். ஆகவேதான் தாமஸ் ஜெஃபர்சன் திறமையும் நற்பெயருமுடையவராக இருப்பினும், இப்பட்டியலில் ஜார்ஜ் வாஷிங்டனைவிட மிகக் குறைந்த மதிப்பைப் பெறுகின்றார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 67 | 68 | 69 | 70 | 71 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாமஸ் ஜெஃபர்சன் (கி.பி.1743 - கி.பி.1826), அவர், ஜெஃபர்சன், ஜெஃபர்சனின், சுதந்திர, பிறகு, அவருடைய, அமெரிக்க, தமது, பெரும், வேண்டுமென்று, பெற்றார், ஆயினும், ஏற்றுக், நாடாளுமன்றம், அறிக்கை, தாமஸ், அடிப்படை, வெர்ஜீனிய, குடியரசுத், லூயிசியானாவை, நாம், பலர், மாநாடு, அவருக்கு, ஜூலை, ஆகவே, விரைவில், ஜார்ஜ், எனும், ஓய்வு, வெர்ஜீனியா, அப்போது, அமெரிக்கா, சட்டம், முக்கிய, ஆஃப், அடுத்த, விளைவுகளை, எழுதிய, பெற்ற, ", மேலும், இருப்பினும், கருத்தை, என்பது, இப்பட்டியலில், அறிக்கையை, லாக், தோட்ட, சுதந்திரம், பகுதியை, ஜான், 1776இல், அதில், வாழ்க்கை, காலத்தில், பல்கலைக், ஏற்கவில்லை, கல்வித், அரசியல், முறையில், வெர்ஜீனியாவின், கருத்துகள், மக்களாட்சி, உரிமை, அமெரிக்காவில், வேறு, உரிமைகளின், அரசியலமைப்பு, நிலப், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்