முதன்மை வாழ்க்கை நிகழ்ச்சிகள் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » என் சரித்திரம் » வாழ்க்கை நிகழ்ச்சிகள் - 1
என் சரித்திரம் - வாழ்க்கை நிகழ்ச்சிகள் - 1
மகாமகோபாத்தியாய
டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்களின்
வாழ்க்கை நிகழ்ச்சிகள்
19-2-1855 | திங்கட்கிழமை,தஞ்சை
மாவட்டத்திலுள்ள சூரிய மூலை என்னும் ஊரில் பிறந்தார். |
1861 | அரியிலூர் சடகோப ஐயங்காரிடம் பாடங் கேட்கத் தொடங்கியது. |
1862 | உபநயனம்-பெயர்: வேங்கடராமன். |
16-6-1868 | திருமணம்-மனைவி மதுராம்பாள். |
1869 | செங்கணம்
விருத்தாசல ரெட்டியாரிடம் யாருப்பருங்கலக்காரிகை பாடம் கேட்டது. |
1871 | மாயூரத்தில்
திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் மாணவனாகச் சேர்ந்தது. ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாரதியாரைச் சந்தித்தது; ஆசிரியர் இட்ட பெயர் சாமிநாதன். திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர்,வித்துவான் தியாகராச செட்டியார் இவர்களுடைய தொடர்பும்,ஆதரவும். |
1872 | ஆசிரியருடன் திருவாவடுதுறை சென்றது. |
1873 | உத்தமதானபுரத்தில்
கவி இயற்றியது. ஆவுடையார் கோயிலில் புராணப் பிரசங்கம் |
1874 | செங்கணத்தில்
முதன்முதல் நூல் இயற்ற ஆரம்பித்தல்-நூலின் பெயர் “நீலி இரட்டை மணிமாலை”. திருவிளையாடற் புராணப் பிரசங்கம். |
31-1-1876 | ஆசிரியர்
மறைவு. வேதநாயகம் பிள்ளை சந்திப்பு. திருவாவடுதுறை மடத்தில் ஆசிரியராகவும்,மாணாக்கராகவும் பணியாற்றல். |
1877 | ஆதீனகர்த்தர்
ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரை ஐயரவர்களின் தந்தையார் கண்டு உரையாடியது. ஐயரவர்கள் வசிப்பதற்குத் தேசிகர் இல்லம் அமைத்துக் கொடுத்தது. மாத வேதனம் அளித்தமை. |
1878 | மதுரை,திருநெல்வேலிப்
பயணம் ஆதீனகர்த்தர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் ஐயரவர்களுக்குச் சன்மானம் அளித்தது. |
1880 | வித்துவான்
தியாகராச செட்டியார் அவர்களின் விடா முயற்சியால், கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக வேலை பெற்றது. சேலம் இராமசாமி முதலியார் |
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாழ்க்கை நிகழ்ச்சிகள் - 1 - En Sarithiram - என் சரித்திரம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்