முதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » புலிப்பாணி ஜோதிடம் 300 » பாடல் 257 - புதன் மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 257 - புதன் மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்
பலனில்லா புதன் திசையில் ராகுபுத்தி |
புதமகா திசையில் இராகு புத்தி தீங்கு தருகின்ற 2 வருடம் 6 மாதம் 18 நாள்களாகும். இவ்விராகு பகவான் இவரது ஆதிக்ககாலத்தில் நிகழ்த்தும் பலன்களாவன: தேக பலத்தைச சிதைக்கும். பலவித நோய்களும் மயக்கமும் ஏற்பட்டு அதனால் பெரும் பொருட் சேதம் உண்டாகும். முரண்பட்டுப் பேசக் கூடிய பகைவர்களால் அறிவற்றவர் நேசம் ஏற்படும். இடையீடில்லாத வியாதிகளால் பெரும் பொருள் சேதமாவதுடன் நல்ல கட்டுக்கோப்போடு வீடு முதலாக விளைவயலும் பெருநிதியும் அழியும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் புதன் மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 255 | 256 | 257 | 258 | 259 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 257 - புதன் மகாதிசை, இராகு புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -