புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 147
கூறினேன் ஆறோனும் மலைக்கிரெண்டில் |
மற்றொரு கருத்தையும் கூறுகிறேன் கேட்பாயாக! இலக்கினத்திற்கு ஆறுக்குடையவன் இரண்டில் இருப்பின் அச்சாதகனுக்கு எதிரியினுடைய பொருளும் தனமும் வெகுவாகச் சேரும். அதே சமயம் இரண்டாம் பாவாதிபதி கெடுவானாயின், அச்சாதகன் நல்ல களவாளியென்றும் வஞ்சகன் பொய்யன் என்பதையும் வகையாக உணர்ந்து கொள்க. அதேபோல் 2-க்குடையவன் ஆறாமிடத்தை அடைந்து நிற்க அச்சாதகனின் எதிரிக்கு மேற்குறித்த பலன்களைச் செப்புக என்று போகரின் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 145 | 146 | 147 | 148 | 149 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 147 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -