புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 125
அறிவித்தேன் அஞ்சுக்கு அஞ்சொன்றாலும் |
இன்னமொரு கருத்தினையும் உனக்கு அறிவிக்கின்றேன் அதனையும் நீ மனங்கொண்டு கேட்பாயாக! ஐந்திற்கு ஐந்தான ஒன்பதாமிடத்ததிபதி அவனது ஸ்தானத்திற்குத் திரிகோண (1,5,9) ஸ்தானத்தில் நிற்கப் பிறந்த சாதகனுக்கு திரவிய லாபமும் வயல், வரப்பு, தோப்பு முதலியனவும் நல்ல தொட்டிக் கட்டுள்ள அரண்மனை போன்ற வீடும் அமைந்து நல்ல முறையில் வாழ்வான். அதுமட்டுமல்லாமல் கோயில் புனருத்தாரணம் செய்வான். மேலும் பரோபகாரியாகவும் பேரும் புகழும் பெற்று வாழ்வான். ஆனால் இலக்கினாதிபதி 12,6,8 ஆகிய இடங்களில் நின்றால் வெகுதன விரயம் ஏற்படும். அதாவது பூர்வீக சொத்துகள் கூட அழியும் என்று போகர் ஆணையால் புலிப்பாணி தெரிவித்தேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 123 | 124 | 125 | 126 | 127 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 125 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -