புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 122
கூறப்பா யின்னமொரு புதுமைசொல்வேன் |
இன்னுமொரு புதுமையினையும் கூறுவேன், கேட்பாயாக! குரு சந்திரயோகத்துடன் பிறந்த ஜென்மனுக்கு மிகவும் சிறப்பே கிடைக்கும். செம்பொன்னும் நன்மனையும் அவனுக்கு வாய்க்கும். அவன் பிறந்த மனையைத் தெய்வம் காவல் கொள்ளும். பெண்களால் நிறைந்த தனலாபம் ஏற்படும். பூமியில் அவன் பேரும் புகழும் பெற்று வாழ்வான். இறையருள் வாய்ந்தவன். ஆனால் குரு சந்திரயோகம் தந்த பாவாதிபதி மறைந்தால் இப்பலனைக் கூறாதே எனப் போகர் அருளாணை பெற்ற புலிப்பாணி நவின்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 120 | 121 | 122 | 123 | 124 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 122 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -