புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 103
பாடினே னின்னமொரு புதுமைகேளு |
நான் கூறுகின்ற இன்னொரு புதுமையும், நீ கேட்பாயாக! ஸ்தான பலமிக்க செவ்வாய் இரண்டாம் இடத்தில் நிற்க அச்சாதகனின் மனையில் அனுதினமும் போர் நிகழும். காரணம் மனைவி அவனைக் கருதிப் பாராதவளாக இருப்பாள். ஆயினும் அவள் மடிந்தாளேயானால் தனம் விரயமாதலும், மனோ வியாகூலமும், அடைந்து அழுகையினால் அச்சாதகன் மாய்வான் என்றே கூறுவேன். ஆடவர்கள் அழுத கூலிக்காக அவலையும் கடலையையும் அவர்தம் மடியில் போடுவார் என்று போகர் அருளாணைப்படி புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 101 | 102 | 103 | 104 | 105 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 103 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -