ஆரூடப் பாடல் 64 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௬௪. (64) வந்தால்..
அகஸ்தியானர் கூறியதோர் வாக்கியத்தை யாருமே நம்பிமோசம் போனதில்லை சுகத்தைத்தரும் குடும்பத்தின் கஷ்டந்தீரும் சுபக்கிரக பார்வையினால் லாபமுண்டாம் மகப்பெறும் சுகவாழ்வும் பகையம் நீங்கும் மண்ணதனை எடுத்தாலும் பொன்னதாகும் ஜெகந்தன்னிலே எதிரியின்றி செழித்து வாழ்வாய். தியாகராஜன் குகனருளால் செப்பினேனே. |
ஆரூடத்தில் அறுபத்தி நான்கு வந்திருப்பது, சுபக் கிரகங்களின் பார்வை கிடைத்திருப்பதை குறிக்கும். அதனால் குடும்பக் கவலை நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். சுகமான வாழ்வு அமையும். பகை கொண்டவர்கள் அதை மறந்து உன்னிடம் நட்பு கொள்வார்கள். நீ மண்ணை தொட்டாலும் பொன்னாகும் காலம் இது. உனக்கு எதிரி என்று யாருமே இனி இருக்க மாட்டார்கள். இந்த ஆரூடத்தை நம்பிய எவரும் மோசம் போனதில்லை. ஏன் என்றால் இந்த ஆருடத்தை சிவனின் அருளாலும், முருகனின் அருளாலும் பாடியிருக்கிறேன் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 64 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்