ஆரூடப் பாடல் 53 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௫௩. (53) வந்தால்..
விதிப்பயனிது வென்று நொந்திடாதே உதித்தொரு கிரகத்தின் கோளாறிது நிதியின்றி முன்கோடம் நீதான் கொண்டு நிகழ்ந்தொணா பழிசெயலி லீடுபட்டு பதியிழந்தாய் பொருளிழந்தாய் தொழிலிழந்தாய் பரதேசிபோல் மனது கலங்கி நின்றாய் சதியில்லை மாதம்மூன்று சென்றதானால் சாதிப்பாய் பலவிதத்தில் ஜெயமேதானே. |
ஆரூடத்தில் ஐம்பத்தி மூன்று வந்திருப்பது, உன்னை கெட்ட கிரகத்தின் கோளாறுகள் வருத்துவதைக் குறிக்கிறது. இது என் விதி என்று வருந்தி வணங்கும் தெய்வங்களையும், பெற்றோர்களையும் நிந்தனை செய்யாதே. இதற்கு முன்னும் உனது முன் கோபத்தினால் வீட்டை விட்டு பிரிந்து சென்றாய். கையில் இருந்த பொருட்களையும் இழந்தாய். தொழிலையும் இழந்தாய். இப்போது மீண்டும் மனம் கலங்கி கவையுடன் நிற்கிறாய். இவை எல்லாம் இன்னும் மூன்று மாதத்தில் தீரும். அதன் பின் பல வழிகளிலும் சாதித்து வெல்வாய் அதுவரை பொறுமையுடன் இருக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 53 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்