ஆரூடப் பாடல் 30 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௩o. (30) வந்தால்..
ஆதிமுத லிதுவரையில் னேகதுன்பம் அப்பனே அனுபவித் தவஸ்த்தையுற்றாய் பாதியிலெ பெரியோரின் பொருளைத் தோற்றாய் பலவிதத்தில் தொழில் முறையிலவ் நஷ்டமுற்றாய் வாதியாய் பந்துகட்கும் வைரியானாய் வலுத்தமுள்ள நோயாலே வருத்தப்பட்டாய் நீதியாய் இருபது நாள்தான் சென்றால் நிச்சயமாய் சுகமுண்டு நினைத்துப்பாரே. |
ஆரூடத்தில் முப்பது வந்திருப்பதால், இது நாள் வரை நீ அளவற்ற கவலைகளை அனுபவித்து வருகிறாய். பெரியோர்களின் பொருளை அழித்தாய். தொழிலிலும் பலி விதமான நஷ்டப்பட்டாய். உன் உறவினர்களுக்கு எதிரியானாய். நோய் வாய்ப்பட்டு மிகவும் வருந்தினாய். தைரியத்தை விடாதே. இன்னும் இருபது நாளில் உன் கஷ்டங்களெல்லாம் விலகி சுகமுண்டாகும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 30 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்