ஆரூடப் பாடல் 24 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௨௪. (24) வந்தால்..
போனதை மறந்துவிட புகழேயுண்டு புண்ணியனே மனக்கலக்கம் வேண்டாமென்று கானகம் சென்ற ராமர் மற்றும் தருமர் கனநளன் அரிச்சந்திரன் கதையைப்போல ஆனதோர் இம்மாதம் சென்றதனால் அழிந்திட்ட பொருளனைத்தும் வரவேநேரும் வேணவே செல்வமுடன் கலகம் நீங்கும் வார்த்தகமும் புத்திரரும் மிகவுண்டாமே! |
ஆரூடத்தில் இருபத்திநான்கு வந்திருப்பதால், இதுநாள் வரை அளவில்லாத கஷ்டங்களையும் அதனால் தொழில் நஷ்டங்களையும் அடைந்து பலவிதமாக கவலை அடைந்து இருக்கிறாய். ஆனாலும் அந்தக் கவலைகள் எல்லாம் இப்பொழுதே மறந்துவிடு. தைரியத்தை கை விடாதே, இதற்கு முன் தருமர், நளன், அரிச்சந்திரன் போன்றவர்கள் எல்லாம் பல இன்னல்களை அடைந்து முடிவில் சுகத்தை அனுபவித்திருக்கிறார்கள். அது போல் உனக்கும் இம்மாதத்தின் பின்னரே நன்மை உண்டாகும். அழிந்த பொருள் எல்லாம் வந்துசேரும். கவலை எல்லாம் நீங்கும். இப்பொழுது கலங்காமல் காத்திரு என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 24 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்