மருதகாசி பாடல்கள் - பக்கம் - 145

உருளும் பணம் முன்னே! உலகம் அதன் பின்னே! தெரிந்து நட கண்ணே! திறமையுடனே! உல்லாசமும் சல்லாபமும் சொல்லாமலே தன்னால் வரும்! எல்லோரும் நம்மைக் கொண்டாடவே இல்லாத பெயர் எல்லாம் தரும்! உள்ளதைக் கோட்டை விட ஆளிருக்கும்போது! சில்லறைப் பஞ்சம் நம்ம கூட்டத்திற்கு ஏது? கண்ணாலே ஜாடை காட்டு! உன் கையைக் கொஞ்சம் நீட்டு! உன் எண்ணம் போல இன்ப வாழ்வு வந்து சேரும்! தள்ளாடும் கிழத் தாத்தாவுக்கும் துள்ளாட்டம் போட ஆசை வரும்! ஒய்யாரிகளின் நேசம் தரும்! மெய்யான சுகவாசம் பெறும்! கள்ளரை நல்லவரைப் போல அதுகாட்டும்! கண்ணியம் உள்ளவரைக் கூட அது வாட்டும்! என்னாளும் அதைத் தேடு! உன் சொந்தமாக்கிப் போடு! உன் எண்ணம்போல இன்பவாழ்வு வந்து சேருமே! |
பொன்னுவிளையும் பூமி-1959
இசை: ரெட்டி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 143 | 144 | 145 | 146 | 147 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 145 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -