மருதகாசி பாடல்கள் - பக்கம் - 124
தாவி வரும் காவிரியின் சோலையோரம்! பூவிரிய வண்டுபாடும் காலை நேரம்! ஆவலுடன் பறவையினம் ஆரவாரம்-செய்து காவினிலே இரை தேட வெளி யேறும்! நாவினிக்க உண்பதற்கு காய்கனிகள்! நஞ்சைகளில் தங்கநிற நெல்மணிகள்! மேவி நிற்கும் காட்சியின்பம் காணும் விழிகள்! வேறெதையும் விரும்புமோ இந்த உலகில்? வான்மழையின் வளம் தோன்றும் வயல்களிலே!-கலை! வாணர்களின் திறம் தோன்றும் கோயில்களிலே! மாறாத குளுமை தோன்றும் தென்றல்தனிலே! என் மாதரசி மேனி தோன்றும் மாந்தளிரிலே! |
பெரியகோயில்-1958
இசை: K V: மகாதேவன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 122 | 123 | 124 | 125 | 126 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 124 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - தோன்றும்