மருதகாசி பாடல்கள் - பக்கம் - 126
சமூகம்
(தொகையறா)
சத்தியம் பொய்யாகும்! தருமம் தலைசாயும்! அறநெறிகள் அலைமோதும்! அதர்மம் அரசாளும்! பருவ நிலை மாறும்! பசுமைக்கு பஞ்சம் வரும்! வறுமை சதிராடும் மண்ணுலகே நரகாகும்! |
(பாட்டு)
அது முத்திய கலியின் அடையாளம்! அதன் முடிவே கல்கி அவதாரம்! எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்! என்னும் நிலைமை வரும்-அது பிஞ்சுக் குழந்தைகள் உண்ணும் உணவிலும் பெரிதும் கலந்து விடும்! (அது) அருந்தும் மருந்தில் நஞ்சைக் கலக்கி அழகுச் சிமிழில் அடைத்து மயக்கி விற்பனை செய்பவர் வளமடைவார்-பெரும் வியாபாரிகள் எனும் பெயரடைவார்! (அது) மானாட்டம் மயிலாட்டம் மலராட்டம் கொடியாட்டம் மகிழ்வூட்டும் பரதக்கலை-கண் வழியே மனங்காட்டும் புனிதக்சலை-மாறி நாயாட்டம் பேயாட்டம் நரியாட்டம் கரியாட்டம் வெறியூட்டும் அங்கங்களை-தெளிவாக வெளிக்காட்டும் புதியக்கலை! (அது) புல்லரும் பொய்யரும் கள்வரும் கயவரும் புயவலி கொண்டாட-பெரும் செல்வமிகுந்தவர் வல்லமையுற்றவர் ஜெயம் ஜெயமென்றாட-மிக நல்லவர் ஏழைகள் ஞானிகள் மாணிகள் உள்ளம் பதைத்தாட-கொடும் நாலாம் புகமது முடிவுறும் நாள்வர கோள்களும் கூத்தாட-மனிதப் பேய்களும் கூத்தாட! “வெடி படு மண்டத் திடிபல தாளம் போடும்-வெட்ட வெளியிலிரத்தக் களியோடு பூதம் பாடும்”. சட்டச் சட சட வென்று எரிமலை வெடித்தே சாடும். கட்டக் கட கட கட வென பூமி பிளந்தேயாடும்! புயலுமெழுந்திடும்! மழையும் பொழிந்திடும்! அலைகடல் பொங்கும் உலகையழிக்கும் ப்ரளயம்-மஹாப்ரளயம்-மஹாப்ரளயம். |
தசாவதாரம்-1975
இசை: ராஜேஸ்வரராவ்
பாடியவர்: A. L. மகாராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 124 | 125 | 126 | 127 | 128 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 126 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -