வராக புராணம் - பகுதி 20 - பதினெண் புராணங்கள்
தைமாதம், சுக்கிலபட்சம் பஞ்சமி திதியில் ஸ்கந்தனை நினைத்து வழிபடுவது இவ்விரதமாகும்.
சாந்தி விரதம்
கார்த்திகை மாதம் சுக்கிலபட்சம் பஞ்சமி திதியில் கடைப் பிடிக்கப்படும் இவ்விரதம் குடும்பத்தில் ஏற்படும் துன்பங்களை விலக்கிவிடும். இவ்விரதம் அனுஷ்டிப்பவர்கள் சூடான உணவை ஒரு வருட காலத்திற்குத் தவிர்க்க வேண்டும். ஆதிசேஷனை வணங்க வேண்டும்.
புத்ரேஷ்டி விரதம்
இவ்விரதம் இருப்பவர்கள் பால், தயிர் முதலியவற்றைத் தானமாகக் கொடுக்க வேண்டும். குழந்தை கிருஷ்ணனை வணங்க வேண்டும்.
யுகங்கள்.
பத்ரஷ்வா அரசனுக்கும், அகஸ்திய முனிவருக்கும் இடையே யுகங்கள் பற்றிய உரையாடல் நடைபெற்றது.
கலியுகத்தில் வர்ணாசிரம தர்மங்கள் அழிந்துவிடும். இந்த யுகத்தில் நல்லவை அழிந்து, கொடுமைகளே தலைதூக்கி நிற்கும். உண்மையான சக்தி இல்லாமல், வெறும் சடங்குகள் மூலம் இறைவனை அடைதல் இயலாது. நாராயணனே அனைத்திலும் முன்நிற்பவர் என்று சிவபெருமானே கூறியுள்ளார். ஆதலால் படைக்கப்பெறும் பொருட்கள் யாவும் விஷ்ணுவுக்கே முதலில் படைக்கப்பெற வேண்டும்.
கலியுகம் என்பது, நாராயணனால் தோற்றுவிக்கப் பட்டாலும், கெளதம முனிவரின் சாபம் பற்றித் தெரிந்து கொண்டால் மட்டுமே, கலியுகம் பற்றி அறிந்து கொள்ள முடியும். அப்படி கெளதம முனிவரின் சாபம் என்ற ஒன்று இல்லையென்றால், கலியுகம் என்பது வேறுமாதிரி அமைந் திருக்கும். ஒருமுறை கெளதம முனிவர், அரிசியும் பழங்களும் எப்பொழுதும் தன்னிடம் நிறைய இருக்க வேண்டும் என்ற வரத்தினை, நாராயணனிடம் இருந்து பெற்றிருந்தார். ஒரு சமயம் கடுமையான பஞ்சம் ஏற்பட்ட பொழுது, சடவிருங்காவில் இருந்த முனிவர்களுக்கு, தன்னிடம் இருந்த அரிசி, பழங்கள் முதலியவற்றைக் கொடுத்துப் பசி தீர்த்தார். அவர்களும் பெரிதாக மகிழ்ந்தனர். சில நாட்கள் கழித்து அம்முனிவர்கள், பஞ்சம் தீர்ந்தவுடன் கெளதம முனிவரிடம் சொல்லாமல் அவரது ஆசிரமத்தை விட்டுச் சென்றுவிட்டனர். அவ்வாறு செல்லுமுன், கெளதம முனிவர் ஏதோ தவறு செய்து விட்டது போலவும், அதன் காரணமாகவே தாங்கள் அந்த ஆசிரமத்தை விட்டுச் செல்வதாகவும் ஒரு சூழ்ச்சி செய்திருந்தனர்.
அந்த முனிவர்கள் தம்முடைய சக்தியால் ஒரு பசுவை, கெளதம முனிவரின் ஆசிரமத்திற்கு வரவழைத்து அவர் பார்க்கும் இடத்தில் நிறுத்தி வைத்தனர். வெளியே சென்றிருந்த முனிவர், வந்தவுடன் பசுவைப் பார்த்து மிக்க மகிழ்ச்சியுடன் நீர் அருந்தக் கொடுத்தார். நீரை அருந்திய பசு, இறந்துவிட்ட பசுவினைப் போல் கீழே விழுந்துவிட்டது. இதைக் கண்ட மற்ற முனிவர்கள் கெளதம முனிவர் ஒரு பசுவினைக் கொன்று விட்டார் என்று கூறி, அதனாலேயே தாங்கள் அந்த ஆசிரமத்தை விட்டுச் செல்வதாகவும் கூறிச் சென்றனர்.
கெளதம முனிவர், இமயமலை சென்று இப்பாவத்தைப் போக்க எண்ணி சிவபெருமானை நினைந்து தவம் இயற்றினார். அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் தன்னுடைய முடியினைக் கொடுத்தார். அந்த முடியினை கெளதம முனிவர் தன் ஆசிரமத்திற்குக் கொண்டு வந்தார். அதிலிருந்து கோதாவரி கங்கை உற்பத்தியாயிற்று. அந்த நீர் பட்டவுடன் இறந்து கிடந்த பசு உயிருடன் எழுந்ததைப் பார்த்த கெளதம முனிவர், தன்னை மற்ற முனிவர்கள் ஏமாற்றியதைத் தெரிந்து கொண்டார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 22 | 23 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வராக புராணம் - பகுதி 20 - Varaha Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கெளதம, முனிவர், வேண்டும், அந்த, முனிவர்கள், விட்டுச், முனிவரின், கலியுகம், இவ்விரதம், ஆசிரமத்தை