வராக புராணம் - பகுதி 22 - பதினெண் புராணங்கள்
பிருத்வி, வராகத்தைப் பார்த்து ஒருவருடைய பாவங்களைப் போக்கிக் கொள்ளச் சிறந்த வழி யாது? என்று கேட்டது. அதற்கு வராகம் சொன்ன விடை வருமாறு:
ஒருவர் காலை எழுந்தவுடன் முதலில் உடம்பைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சாணத்தால் மெழுகி தூய்மை செய்ய வேண்டும். பக்கத்தில் ஒரு விளக்கை ஏற்றிவைக்க வேண்டும். விஷ்ணு விக்கிரகத்தை அந்தத் தூய்மையான இடத்தில் வைத்து, மலர்களாலும் மாலையாலும் அலங்கரிக்க வேண்டும். பால், நெய் முதலியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பிறகு விஷ்ணுவின் புகழைப் பாட வேண்டும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாகத் தேவைப்படுவது தூய்மையான மனத்துடன் விஷ்ணு இடத்தில் அன்பு செய்வதாகும்.
இதற்கடுத்த படியாக ஒருவன் மறுபிறப்பில் மிருகமாகவோ, பறவையாகவோ பிறக்காமல் இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரேவழி நேர்மையான வழி நடத்தல், விரதங்களை மேற்கொள்ளல், பெற்றோர்களை மதித்து நடத்தல், காகமுகா என்ற தீர்த்தத்தில் உயிரை விடும் ஒருவன் உறுதியாக மறுபிறப்பில் மிருகமாகவோ பறவையாகவோ பிறக்கமாட்டான். இதற்கு ஒரு உதாரணக் கதையை வராகம் கூறிற்று.
ஒருமுறை ஒரு வல்லுறு மிக வேகமாகத் தண்ணிரில் பாய்ந்து ஒரு பெரிய மீனைக் கவ்வி அதை எடுத்துக் கொண்டு ஆகாயத்தில் எழுந்தது. மீனின் கனம் தாங்காமல் வல்லுறும், இருந்ததால் அந்த மீனும், அதில் முக்கிக் குளித்து எடுத்ததால் வல்லூறும் இப்பிறவி நீங்கி மீன் ஒரு ராஜகுமாரனாகவும், வல்லுறு ஒரு அரசகுமாரியாகவும் பிறந்தன. அந்த அரசகுமாரியை, அந்த அரசகுமாரன் மணந்து கொண்டான். சில நாள் கழித்து, அரச குமாரனுக்குத் தீர்க்க முடியாத தலைவலி வந்தது. தாய் தந்தையரிடம் விடை பெற்றுக் கொண்டு அவர்கள் இருவரும் கோகமுகா தீர்த்தத்திற்கு வந்தார்கள். அங்கே வந்தவுடன் அவர்களுக்கு பூர்வ ஜென்மத்தின் நினைவு வந்தது. மீனாக இருந்த அரச குமாரன் திடீரென்று தரையில் விழுந்து தலையில் அடிபட்டதால் இந்த ஜென்மத்தில் தலைவலி உண்டாயிற்று என்று அறிந்து விஷ்ணுவைத் தியானித்து தீர்த்தத்தில் மூழ்கி துன்பம் நீங்கப் பெற்றான்.
மாயை
வராகம் பிருத்வியைப் பார்த்து யாரும் மாயை பற்றி அறிந்து கொள்ள முயலக் கூடாது. அதற்காக இந்தக் கதையைச் சொல்கிறேன் என்று ஆரம்பித்து பின்வரும் கதையைக் கூறிற்று. ஹிர்த்து வனத்தில் சோமசர்மா என்ற பிராமணன் வாழ்ந்து வந்தார். சிறந்த விஷ்ணு பக்தனான அவன் ஒருமுறை தவம் செய்கையில் விஷ்ணு எதிரே தோன்றினார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று விஷ்ணு கேட்க மாயை பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார் சோமசர்மா. அது மனிதனுக்குத் தேவை இல்லாத ஒன்று! என்று விஷ்ணு எடுத்துச் சொல்லியும் சோமசர்மா கேட்கவில்லை. பிடிவாதமாக இருந்ததால் அவனை அழைத்துச் சென்று பக்கத்தில் உள்ள ஆற்றில் குளிக்கச் சொன்னார். உடைகள், கமண்டலம் முதலியவற்றை தரையில் வைத்துவிட்டுச் சோம சர்மா தண்ணீருக்குள் பாய்ந்தான். திடீரென்று நிஷாதர்கள் வசிக்கும் எதிர்க்கரையிலுள்ள கிராமத்தில் பெண்ணாகப் பிறந்து நிஷாதன் ஒருவனை மணந்து கொண்டு, அவனிடத்தில் இரண்டு பெண்களையும், மூன்று நெறிகளையும் பெற்றார். பல ஆண்டுகள் கழிந்தன. சோமசர்மாவுக்குத் தவம் என்பதே மறந்துவிட்டது. அந்த இடத்தில் விஷ்ணு தோன்றி அவன் யார் என்பதை நினைவூட்டியவுடன் பழைய சோமசர்மா ஆக விரும்பினான். ஆற்றின் கரையில் அப்பெண் தன் துணிகளைக் களைந்து வைத்து விட்டுத் தண்ணிரில் குளிக்கச் சென்றாள். நீரில் பாய்ந்த அப்பெண் எதிர்க்கரையில் சோமசர்மாவாக வெளியே வந்தார். தன் உடைகளை மாற்றிக் கொண்டு, தான் நிஷாதப் பெண்ணாக இருந்ததை நினைத்தார். அப்பொழுது எதிர்க்கரையில் அந்த நிஷாதப் பெண்ணின் கணவன் கரைக்கு வந்து மனைவியின் துணிகள் இருப்பதைப் பார்த்து அவள் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டாள் என்று கருதி 'ஒ' என்று கதறி அழுவதைக் கண்ட சோமசர்மா அவனுக்குச் சமாதானம் சொல்லி வீட்டிற்குச் சென்று குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளுமாறு புத்திமதி சொன்னார். அந்த நிஷாதன் கவலை குறையாமல் அழுததைக் கண்டு, உண்மையைக் கூறிவிடலாமா என்று கூட சர்மா நினைத்தார். அந்த நிலையில் விஷ்ணு தோன்றியவுடன் சர்மாவைப் பார்த்து எதிர்க்கரையில் பார்’ என்று கூறினார். இங்கு விஷாதர்கள் தங்கிய எந்த ஒரு அடையாளமும் இல்லை. இதுதான் மாயையின் செயல். மானிடர்கள் மாயையின் செயலை அறியாமல் இருப்பதே சிறந்தது என்று கூறினார். சோமசர்மா வீட்டிற்கு வந்ததும், பக்கத்தில் உள்ள முனிவர்கள் ஒன்று சேர்ந்து, குளிக்கச் சென்ற நீ இவ்வளவு நேரம் கழித்துவரக் காரணம் என்ன என்றார்கள். அதற்கு விடைகூற விரும்பாத சோமசர்மா குப்ஜம்ரகாதீர்த்தம் சென்று கடுமையான விரதம் அனுஷ்டித்தார்..
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வராக புராணம் - பகுதி 22 - Varaha Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, விஷ்ணு, அந்த, சோமசர்மா, வேண்டும், கொண்டு, பார்த்து, மாயை, எதிர்க்கரையில், அறிந்து, குளிக்கச், சென்று, இடத்தில், அதற்கு, வராகம், கொள்ள, பக்கத்தில், தவம்